புதுதில்லி, டிச. 9 - உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரைகளில், ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதி மற்றும் 8 உயர்நீதிமன்ற நீதிபதி களை நியமனம் செய்வதற்கான பரிந்துரைகளை ஒன்றிய அரசு நிலு வையில் வைத்துள்ளதாக சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள் ளார். மாநிலங்களவையில் இதுதொடர் பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு எழுத்துப் பூர்வமாக பதிலளித்துள்ளார். அதில், “ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி மற்றும் 8 உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்வதற்காக உச்ச நீதிமன்றம் கொலீஜியம் சார்பில் கடந்த டிசம்பா் 5-ஆம் தேதி முன்வைக்கப் பட்ட பரிந்துரையை ஒன்றிய அரசு நிலுவையில் வைத்துள்ளது. இதுதவிர, 11 உயர் நீதிமன்ற நீதிபதி கள் மற்றும் ஒரு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை பணியிடமாற்றம் செய்வதற்கான கொலீஜியத்தின் பரிந்துரையும், ஒரு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியை நியமனம் செய்வதற்கான பரிந்துரையும் ஒன்றிய அரசின் பரிசீலனையில் உள்ளன” என்று தெரிவித்துள்ளார்.
330 நீதிபதி பணியிடங்கள்
மேலும், அவையில் எழுப்பப் பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ஒன்றிய அமைச்சர், ‘நீதிபதிகள் நிய மனம் தொடர்பான கொலீஜியத்தின் பரிந்துரைக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளிக்க தாமதிப்பது குறித்து வழக்கு விசாரணையின்போது, உச்சநீதி மன்றம் கருத்து தெரிவித்திருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் 256 பரிந்துரை கள் ஒன்றிய அரசு சார்பில் உயர்நீதி மன்றங்களுக்கு திருப்பி அனுப்பப் பட்டுள்ளன. உச்சநீதிமன்ற கொலீஜி யத்தின் அறிவுரையின் பேரிலேயே இந்த பரிந்துரைகள் திருப்பி அனுப்பப் பட்டன. மேலும், டிசம்பர் 5-ஆம் தேதி நிலவரப்படி, உச்சநீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட 34 நீதிபதி பணியிட ங்களில் 27 இடங்கள் நிரப்பப்பட்டிரு க் கின்றன. 7 நீதிபதி பணியிடங்கள் மட்டுமே காலியாக உள்ளன. உயர்நீதி மன்றங்களில் அனுமதிக்கப்பட்ட 1,108 நீதிபதி பணியிடங்களில் 778 நீதி பதிகள் பணியாற்றுகின்றனா். 330 நீதி பதி பணியிடங்கள் காலியாக உள்ளன’ என்றும் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.