states

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து

https://www.facebook.com/ComradeSRY/
https://twitter.com/SitaramYechury

பி.எம். கேர்ஸ் என்ற பெயரிலான நிதி குறித்த வழக்கில் ஒன்றிய அரசு வெறும் ஒரே ஒரு பக்கம் அளவில் மட்டுமே அபிடவிட் (பிரமாணப் பத்திரம்) தாக்கல் செய்துள்ளது. இதுகுறித்து தில்லி  உயர்நீதிமன்றம் தனது கோபத்தை வெளிப்படுத்தி யுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 12 இன் கீழ் பிஎம் கேர்ஸ் நிதியை ஓர் “அரசு” நிதியாக பிர கடனம் செய்ய வேண்டும் என்ற மனு மீதான பதி லாகத்தான் ஒரு பக்க அளவில் அபிடவிட் தாக்கல்  செய்யப்பட்டுள்ளது.  மிக முக்கியமான இப்பிரச்சனையில் இவ்வளவு தான் ஒன்றிய அரசின் பதில் என்பது எந்த விதத்தி லும் பொருத்தமானதல்ல என்று நீதிமன்றம் கூறி யிருப்பது கவனிக்கத்தக்கது.  பிரதமரின் கீழ் “தனியார் அறக்கட்டளை” என்ற பெய ரில் இயங்கும் பிஎம் கேர்ஸ் நிதி, அரசாங்க அதி காரம் மிக்கவரின் பெயரால் அரசாங்கத்திற்கே வழி காட்டுதல் உத்தரவுகளை பிறப்பிக்கிறது; இந்தக்  கணக்கு எவருக்கும் பொதுவானதாக வைக்கப் படாது; தணிக்கை செய்யப்படாது; எவ்வளவு பணம்  வந்திருக்கிறது என்ற வெளிப்படைத் தன்மையும் இல்லாதது.  கோடிக்கணக்கான ரூபாய் இதன் உள்ளே இழுக்கப்  பட்டிருக்கிறது. ஆனால் நாட்டு மக்கள் எவருக்கும் அது எவ்வளவு என்று சொல்லப்படாது. இது மிகப்  பெரும் அரசியல் ஊழல். எந்தவிதத்திலும் ஏற்றுக்  கொள்ளவே முடியாது. பிரதமரே பதில் சொல்லுங்கள்.