states

img

வெறுப்பு பேச்சு ஒரு கடும் குற்றம்

புதுதில்லி, ஏப்.28- வெறுப்பு பேச்சு கடுமை யான குற்றம் என தெரி வித்துள்ள உச்சநீதிமன்றம், அவ்வாறு வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசி யது தொடர்பாக புகார் இல்லாவிட்டாலும் வழக்கு பதிய வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு உத்தர விட்டுள்ளது. வெறுப்பு பேச்சு தொடர் பாக தாக்கல் செய்யப் பட்டுள்ள பல்வேறு வழக்கு களை, நீதிபதிகள் கே.எம்.ஜோசப், பி.வி.நாகரத்னா அமர்வு வெள்ளியன்று விசா ரித்தது. அப்போது, ‘‘வெறுப்பு பேச்சு ஒரு கடு மையான குற்றம். இது தொடர்பாக புகார் இல்லா விட்டாலும் மாநில அரசுகள் வழக்குகளை பதிவு செய்ய வேண்டும். வழக்குகளை பதிவு செய்வதில் தாமதம் செய்வது நீதிமன்ற அவ மதிப்பாகக் கருதப்படும். வெறுப்பு பேச்சு பேசு பவரின் மதத்தைக் கருத்தில் கொள்ளாமல், அவருக்கு எதி ராக வழக்கு பதிய வேண்டும். அரசியல் சாசனத்தின் முகப்பு உரையில் சொல்லப்பட்டுள்ள கருத்து க்கள் பாதுகாக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம். வெறுப்பு பேச்சு நாட்டின் மதச்சார்பற்ற கட்ட மைப்பை பாதிக்கும். குறிப் பாக சிறுபான்மையின ரிடையே, இது கவலையை யும், அச்சத்தையும் அதி கரிக்கச் செய்கிறது. இதைத் தடுக்க ஒவ்வொரு மாவட்டத் திற்கும் ஒரு கண்காணிப்பு அதிகாரியை மாநில அர சுகள் நியமிக்க வேண்டும்’’ என தெரிவித்தனர். மேலும், வழக்கின் விசாரணையை மே 12 ஆம் தேதிக்கு நீதிபதி கள் ஒத்திவைத்தனர்.