புதுதில்லி,டிச.26- மீண்டும் ஆன்லைன் வகுப்பு மற்றும் தேர்வுகளுக்கு அகில இந்தியத் தொழில்நுட்ப கல்விக்குழு பரிந்துரை செய்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளுக்கு பரவி வரு கிறது. இந்நிலையில் மீண்டும் ஆன்லைன் வகுப்பு மற்றும் தேர்வுகளுக்கு அகில இந்தியத் தொழில்நுட்ப கல்விக்குழு பரிந்துரை செய்துள்ளது. இதுகுறித்து அகில இந்தியத் தொழில்நுட்ப கல்விக்குழு சார்பில் கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பப் பட்டுள்ள சுற்றறிக்கையில், ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், மீண்டும் ஆன்லைன் வகுப்பு மற்றும் தேர்வு கள் நடத்துவது குறித்து தொழில்நுட்ப கல்வி நிலையங்கள் பரிசீலனை செய்து முடிவு எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.