states

தீக்கதிர் உலக செய்திகள்

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை  பயனுள்ளதாக இருந்தது – ரஷ்யா 

அமெரிக்க-ரஷ்ய அதிகாரிகள் இடையேயான பேச்சுவார்த்தை பயனுள்ளதாக இருந்ததாக ரஷ்ய சர்வதேச விவகாரங்களுக்கான குழுவின் தலைவர் கிரிகோரி கராசின் தெரிவித்துள்ளார். போர் நிறுத்தம் குறித்தும் அதற்கு அடுத்த நடவடிக்கை குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்த உரையாடல் கடினமாக தான் இருந்தது. ஆனால் எங்களுக்கும் அமெரிக்கர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த பேச்சுவார்த்தை தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.

துருக்கி : ஏப்ரல் 1 வரை  போராட்டம் நடத்த தடை 

துருக்கி  தலைநகரில் ஏப்ரல் 1 வரை எந்த  போராட்டமும் நடத்தக் கூடாது என அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. ஜனாதிபதி தேர்தலின் எதிர்க்கட்சி வேட்பாளரும் இஸ்தான்புல் மேயரு மான எக்ரம் இமாமோக்லு, அவரது உதவியாளர் உள்ளிட்ட 1000 பேரை எர்டோகன் அரசு கைது செய்துள்ளது. இதனால் அந்நாட்டில் மிகப்பெரும் போராட்டம் வெடித்துள்ளது. போராட்டக் காட்சிகள் வெளியே சென்று விடக்கூடாது என்பதற்காக புகைப்பட பத்திரிகையாளர்களையும் அரசாங்கம் கைது செய்துள்ளது.

வெனிசுலா எரிபொருளை வாங்கினால்  வரி விதிப்பேன் – டிரம்ப் 

வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணெய், எரிவாயு வாங்கும் நாடுகள் மீது 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.  மேலும் வெனிசுலா அரசாங்கம் அமெரிக்காவிற்கு  விரோதமாக உள்ளது என குற்றம் சுமத்தி தனது மிரட்டலை நியாயப்படுத்தியுள்ளார். அதேபோல வெனிசுலா வேண்டுமென்றே திட்டமிட்டு தனிநபர் மற்றும் குழுக்களாக அமெரிக்காவிற்கு குற்றவாளிகளை அனுப்பியுள்ளது என ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். 

தென்கொரியாவில் பரவும்  காட்டுத் தீ

தென் கொரியாவில் கடந்தவாரம் காட்டுத் தீ ஏற்பட்டது. இதனால் சுமார் 14,694 ஹெக்டேர் (36,310 ஏக்கர்) வனப்பகுதி பாதிப்ப டைந்துள்ளது. நான்கு பேர் பலியாகியுள்ளனர். சேதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என உள்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சர் கோ கி-டாங் தெரிவித்துள்ளார். 3,000 க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற் றப்பட்டுள்ளனர். தீயணைப்புப் பணியில் 110 ஹெலிகாப்டர்கள் மற்றும் 6,700 க்கும் மேற்பட்ட வீரர்கள் ஈடுபடுத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.  

தேர்தலில் வெளிநாடுகள் தலையீடு:  கனடா உளவுத்துறை குற்றச்சாட்டு 

கனடாவில் ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இத்தேர்தலில் சீனா, இந்தியா, ரஷ்யா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் தலையீடு இருக்கலாம் என ‘சிஎஸ்ஐஎஸ்’ என்ற கனடாவின் புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி சீனாவும் கனடாவில் வசிக்கும் பல்வேறு சமூகங்கள் மற்றும் நாட்டின் ஜனநாயக செயல்முறைகளில் இந்தியா தலையிடும் எனவும் புலனாய்வு அமைப்பு குற்றம்  சுமத்தியுள்ளது.

வெள்ளை இனக் குழந்தைகளை விட அதிக உயிரிழப்புகளை சந்திக்கும் கருப்பின குழந்தைகள்

கருப்பு மற்றும் வெள்ளை இனஅமெரிக் கர்களுக்கு இடையேயான ஏற்றத் தாழ்வுகள் அவர்களது வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் நிறைந்துள்ளது என புதிய அறிக்கை வெளியாகியுள்ளது.   அன்னல்ஸ் ஆஃப் இண்டர்னல் மெடிசின் என்ற ஆய்வு இதழில் வெளியிடப்பட்ட,  “அமெ ரிக்காவில் 1950 முதல் கருப்பின குழந்தைகளில் அதிகப்படியான இறப்பு விகிதம்: இன ஏற்றத்தாழ்வு கள் பற்றிய 70 ஆண்டு மக்கள்தொகை அடிப்படையிலான ஆய்வு” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இருந்து இது தெரிய வந்துள்ளது. 

கருப்பின அமெரிக்கர்கள் வரலாற்று ரீதியா கவே குறைந்த வருமானம், போதிய அளவில் கல்வி கிடைக்காத நிலை, குறைந்த செல்வ  வளங்களையே அனுபவித்திருக்கிறார்கள் என அவ்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. அதுமட்டு மின்றி உயிரிழப்பு விகிதத்தில் வெள்ளையின அமெரிக்கர்களை விட கருப்பின அமெரிக்கர் களே அதிகமாக உள்ளனர். குறிப்பாக கருப்பி னக் குழந்தைகளில் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது. இனப் பாகுபாடுகள், பொருளாதார ஏற்றத் தாழ்வுகள், சுகாதாரப் பாதுகாப்பின்மை போன்ற மோசமான நிலைமைகளால் 50 லட்சத்துக்கும் அதிகமான தடுக்கப்பட்டிருக்கக் கூடிய மரணங் கள் ஏற்பட்டுள்ளன என்று நிபுணர்கள் தெரி வித்துள்ளனர்.

இந்த அறிக்கையின்படி, 1950 முதல் 70 ஆண்டுகளில் கருப்பு மற்றும் வெள்ளை இன அமெரிக்கர்களிடையே முழுமையான ஆயுள் காலம் மற்றும் இறப்பு ஆகியவற்றில் இருந்த  இடைவெளிகள் குறைந்துள்ளன. ஆனால் இதே காலகட்டத்தில் குழந்தைகளின் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளது. 1950 களில் 1,00,000 லட்சம் குழந்தைகளில் இறப்புவிகிதம் வெள்ளையினக் குழந்தைகள் 2,703 ஆகவும் கருப்பின குழந்தை கள் 5,181 ஆகவும் இருந்தது.   இந்த அளவு 2010 களில் 1,00,000 குழந்தைக ளில் இறப்பு விகிதம் வெள்ளையினக் குழந்தை கள் 499, கருப்பின குழந்தைகள் 1,073 ஆக உள்ளது. இந்த 70 ஆண்டுகளில் 5,22,617 கைக் குழந்தைகள் உட்பட மொத்தம் 50 லட்சம் கருப்பின அமெரிக்கர்களின் உயிரை பாதுகாத்து இருக்கலாம். ஆனால் இரு இனங்களுக்கும் இடையே காட்டப்படும் பாகுபாடுகள் காரணமாக அவர்கள் உயிரிழந்துள்ளனர் என இந்த அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.