states

img

தலித் கிறிஸ்தவர்களை பட்டியலினத்தவராக அடையாளப்படுத்த மோடி அரசு ‘மறுப்பு’

புதுதில்லி, ஏப்ரல் 5- தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த முஸ்லீம்கள் மற்றும் கிறித் துவர்களை, பட்டியல் இனத்தவர்க ளாக அடையாளப்படுத்துதல் குறி த்து அரசிடம் எவ்வித முன்மொழிவும் இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பி னர் பி.ஆர்.நடராஜன் கேள்விக்கு ஒன்றிய அரசாங்கம் பதில் அளித்துள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடை பெற்று வருகிறது. கேள்வி நேரத்தின்போது பி.ஆர். நட ராஜன்,  நாட்டில் தீண்டாமையை ஒழிக்கும் நோக்கத்தில், தாழ்த்தப்பட்ட முஸ்லீம்கள் மற்றும் கிறித்துவர்களை பட்டியல் இனத்தவர்களாக  அடையாளப்படுத்த வழி வகை செய்யும் விதத்தில் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதற்கான முன்மொழிவுகள் ஏதேனும் அரசிடம் உள்ளதா என்று கேட்டிருந்தார். இதற்கு எழுத்துமூலம் பதிலளித்த,  ஒன்றிய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர்  ஏ. நாராயண சுவாமி,  அப்படி எவ்விதமான முன்மொழி வும் அரசிடம்  இல்லை. என்றார்.  எனினும்,  இந்த விஷ யத்தை ஆய்வு செய்ய ஓர் ஆணையம் அமைக்கப் பட்டிருப்பதால், இது தொடர்பாக அரசு எதையும் தீர்மா னிக்க முடியாத நிலையில் (subjudice) இருப்ப தாகவும் தெரிவித்தார்.       (ந.நி.)