புதுதில்லி, டிச. 24 - வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டிய தில்லை. மாறாக, திருத்தங்கள் செய்தால் போதுமானது என்று ஆர்எஸ்எஸ்-ஸின் விவசாயிகள் பிரிவான பாரதிய கிசான் சங்கம் (BKS) முன்பு கூறியிருந்தது. தங்களின் கோரிக்கைகள் மீது முடிவெடுக்க மோடி அர சுக்கு ஆகஸ்ட் 31 வரை அவ காசம் வழங்குவதாகவும், இல்லாவிட்டால் செப்டம்பர் 8 முதல் நாடு தழுவிய அள வில் போராட்டத்தில் ஈடுபடு வோம் என்றும் பிகேஎஸ் அறி வித்தது. மோடி அரசை வழிநடத்துவதே ஆர்எஸ் எஸ் அமைப்புதான் எனும் போது எதற்காக இந்தப் போராட்ட நாடகம் என்று அப் போது கேள்விகள் எழுந்தன. ஆனால், வேளாண் சட்ட ங்கள் மூன்றுமே ரத்து செய்யப்பட்டு,
தில்லியில் போராடிவந்த இடதுசாரி தொழிற்சங்க விவசாயிகள் உட்பட அனைத்து விவசாயி களும் தற்போது தங்கள் மாநி லங்களுக்குத் திரும்பிவிட்ட னர். இந்நிலையில், விவசாயி களுக்கான உறுதிமொழிகள் இன்னும் நிறைவேற்றப் படவில்லை என்றும், எனவே, மோடி அரசை எதிர்த்து 2022 ஜனவரி 1 முதல் அனைத்து கிரா மங்களிலும் தர்ணா போராட் டம் நடத்த திட்டமிட்டிருக் கிறோம் என்றும் ஆர்எஸ்எஸ் விவசாயிகள் பிரிவான பிகேஎஸ் அடுத்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளது.