states

img

தேசியக் கொடியை முன்வைத்து போலி நாடகம்! - ஆர்.பத்ரி

ஆகஸ்ட் 15 1947   இந்தியா விடுதலை பெறுகிற நாளில்  ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அதிகா ரப்பூர்வ பத்திரிகையான ஆர்கனைசர் ஒரு செய்தியை எழுதி வெளியிடுகிறது. அந்த செய்தியின் உள்ளடக்கம் என்ன வெனில் “சுதந்திர இந்தியா ஏற்றுக் கொண்டி ருக்கிற மூவர்ணக்கொடி என்பது எந்த வகை யிலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.  பொதுவாக இந்துக்களைப் பொறுத்த வரை மூன்று என்பது அமங்கலத்தை குறிக்கிற எண்ணிக்கையாகும். மூன்று வண்ணங்களில் வடிவமைக்கப் பட்டுள்ள இந்த கொடியானது இந்திய மக்க ளுக்கு உளவியல் ரீதியாகவே ஒரு அச்சத்தை யும் பாதிப்பையும் உருவாக்கக் கூடியதாகும்.

எனவே மூவர்ணக் கொடியை கண்டிப் பாக மாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி யதாக அந்த செய்தி வெளியாகி இருக்கிறது. அதைப்போலவே மதச்சார்பின்மை கண்ணோட்டத்தை தனது உள்ளடக்கமாக கொண்டிருக்கிற நமது  அரசியலமைப்புச் சட்டத்தையும் ஆர்எஸ்எஸ் நிராகரித்து அதே  நாளில்  மற்றொரு செய்தியையும் ஆர்கனை சர் இதழில் வெளியிட்டிருக்கிறது.. அரசியலமைப்புச் சட்டத்திற்கு மாற்றாக மனுஸ்மிருதிதான் இந்தியாவிற்கு பொருத்த மானதாகும் என ஆர்.எஸ்.எஸ். வாதாடு கிறது. இவைதான் ஆர்எஸ்எஸ் அமைப்பின் அன்றைய தலைவர்கள் மற்றும் இன்றைய வாரிசுகளின் உண்மையான நோக்கமும் விருப்பமும் ஆகும் . ஆனால் அதை முற்றிலும் மறைத்து விட்டு இந்தியா தனது சுதந்திர வைர விழாவை கொண்டாடும் இத்தருணத்தில் வீடுகள்தோ றும் மூவர்ணக் கொடியை ஏற்ற வேண்டும் என்று ஆரவாரமாய் அறிவிப்பை அவர்கள் வெளியிட்டு வருகிறார்கள். 

அவர்களின் இத்தகைய அறிவிப்புக்குப்  பின்னால் உண்மையான தேசபக்தி என்று எதுவுமில்லை.  ஏற்கனவே விடுதலைப் போராட்டத்தில் விலகி நின்று வேடிக்கை பார்த்தவர்களை “வீரர்கள்” என முகமூடி அணிந்து அழைத்து வந்தவர்கள் இப்போது தேசியக்கொடியை முன்வைத்து தேசபக்த நாடகம் போடுகி றார்கள். இரட்டை முகத்தை வைத்து போலி யாக நாடகமாடும் இவர்களிடம் நாம் எச்ச ரிக்கையாக இருக்க வேண்டும் என்பதோடு தேசபக்தி என்கிற பெயரால் இவர்கள் முன்னெடுக்கும் தீவிர தேசிய வாதத்தையும் எதிர்த்து போராட வேண்டியிருக்கிறது. போராடிப் பெற்ற விடுதலையின் மேன் மைகளையும் சுதந்திரத்தின் உண்மையான பலன்கள் அனைத்து மக்களுக்கும் கிடைத்தி டவும் ஒன்றிணைந்து போராடுவோம். போலி தேசபக்தர்களின் முகத்திரையை கிழித்தெறிவோம்.