states

img

‘‘ஜனநாயகத்தை மீட்போம்’’ பெருவில் மீண்டும் போராட்டம்

லிமா, ஜன.6- மக்களால் ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்ட பெட்ரோ காஸ்டில்லோவை பதவி நீக்கம் செய்ததைக் கண்டித்தும், நாடாளுமன்றத்திற்கு விரைவாகத் தேர்தல் நடத்தக் கோரியும் பெருவில் நடைபெற்று வந்த போராட்டங்கள் மீண்டும் தொடங்கியுள்ளன. பெட்ரோ காஸ்டில்லோ தற்போது சிறையில் அடைக்கப் பட்டுள்ளார். அவரை விடுதலை செய்யக் கோரும் முழக்கங்கள் போராட்டங்களில் எழுந்துள்ளன. அரேகுய்பா, அயாகுச்சோ, அபுரிமாக், குஸ்கோ, மோகிகுவா, மாட்ரே டி டியோஸ் மற்றும் புனோ ஆகிய பகுதி களில் பெருந்திரள் பேரணிகள் நடைபெற்று வரு கின்றன. தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரையில் போராட்டங்கள் ஓயாது என்று இந்தப் போராட்டங் களுக்குத் தலைமையேற்றுள்ள சமூக அமைப்புகள் கூறியுள்ளன.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக் கொண்டாட்டங் களின் போது, போராட்டங்களைத் தற்காலிகமாக நிறுத்தி  வைத்திருந்தனர். தற்போது அவற்றை மீண்டும் தொடங்கி யுள்ள அமைப்புகள், அமைதியான பேரணிகளும், அவற்றைத் தொடர்ந்து காலவரையற்ற வேலைநிறுத்தங் களும் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளன. மக்கள் கொந்தளிப்பான மனநிலையில் இருப்பதாகவும் அமைப்புகள் கருதுகின்றன. தலைநகர் லிமாவில் பெருந்திரள் பேரணிக்கு பெரு  தொழிலாளர்கள் கூட்டமைப்பு அழைப்பு விடுத்திருக் கிறது. நாடாளுமன்றத்தை இழுத்து மூட வேண்டும், காஸ்டில்லோவை விடுதலை செய்வது மற்றும் விரை வில் நாடாளுமன்றத் தேர்தல் ஆகிய கோரிக்கைகளை கூட்டமைப்பு ஆதரிக்கிறது என்று அவர்கள் வெளி யிட்டுள்ள அறிக்கை தெரிவித்துள்ளது. போராட்டங்கள் மேலும் எல்லாம் துறைகளுக்கும் பரவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.