ஆந்திர மாநிலம் போலவரத்தில் இடம் பெயர்ந்த மக்களுக்கு நீதி கேட்டும், கோதாவரி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கேட்டும், அல்லூரி சீதாராம ராஜூ மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடைபயணம் மேற்கொண்டுள்ளது. மல்லே தோட்டா கிராமத்தில் நடைபயணத்தை ஆந்திர மாநிலச் செயலாளர் வி.ஸ்ரீனிவாச ராவ் தொடங்கி வைத்தார்.