புதுதில்லி, மார்ச் 14 - “சட்டப்பேரவைத் தேர்தலில் தோற்றாலும், பாஜக மற்றும் அதனு டைய சித்தாந்தத்தை எதிர்த்து காங்கி ரஸ் கட்சி போராடும்” என்று அக்கட்சி யின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார். “ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் அடைந்த தோல்விக்கு சோனியா காந்தி மட்டும் பொறுப்பல்ல!” எனவும் அவர் தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், கோவா, மணிப்பூர், உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடை பெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வியை தழுவியது. குறிப்பாக, பஞ்சாப்பில் ஆட்சியை இழந்தது. ஞாயிறன்று காங்கிரசின் காரியக் கமிட்டி கூட்டம் நடைபெற்ற நிலை யில், அதில், இந்த தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்கப்பட்டது. இந்நிலை யில், கூட்டத்தில் பேசப்பட்ட விவகாரங் கள் குறித்து மல்லிகார்ஜூன கார்கே திங்களன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, “ஐந்து மாநிலங்களில் அடைந்த தோல்விக்கு சோனியா காந்தியோ அல்லது காந்தி குடும்பத் தினர் மட்டுமே பொறுப்பு இல்லை என சோனியா காந்தியிடம் நாங்கள் அனை வரும் தெரிவித்தோம். தோல்விக்கு அனைத்து மாநிலத் தலைவர்களும், எம்.பி.க்களும்தான் பொறுப்பு. சோனியா காந்தி மீது நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம். அவர், ராஜினாமா செய்வது குறித்த கேள்வியே எழவில்லை” என்று தெரிவித்தார். மேலும், “கட்சியை வலுப்படுத்து வதற்கான உத்திகள் குறித்து விவாதிக் கப்பட்டது. பாஜக மற்றும் அதன் சித்தாந் தத்தை எதிர்த்துப் போராடுவோம். எங்கள் சித்தாந்தத்தை வலுப்படுத்தி, வருகின்ற தேர்தல்களில் முன்பைவிட சிறப்பாக செயல்படுவோம்” என்றும் கார்கே குறிப்பிட்டார்.