states

img

தமிழிசைக்கு பொதுமேடையில் அமித்ஷா மிரட்டல்!

ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பதவியேற்ற விழா மேடை யில், தமிழிசை சவுந்தர்ராஜனை, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடுகடுத்த முகத்துடன், எச்சரித்து மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் விவாதமாக மாறியுள்ளது. மாநில ஆளுநராக பதவி வகித்த ஒருவரை- அதுவும் பெண் தலைவரை பொதுமேடையில் இவ்வாறு அமித்ஷா மிரட்டியதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இதுதான் பெண்களுக்கு அதிகாரமளிக்கும் பாஜக-வின் ‘நாரி சக்தி’ முழக்க லட்சணமா? என்று கேள்விக் கணைகள் பாய்ந்துள்ளன. ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தலில் அறுதிப்பெரும்பான்மையுடன் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, புதனன்று (ஜூன் 12) ஆந்திர முதல்வராக பதவி யேற்றுக் கொண்டார்.  விஜயவாடாவின் புறநகர் கேசரப்பள்ளியில் உள்ள கன்னவரம் விமான நிலையம் அருகே காலை 11.27 மணியளவில் இதற்கான விழா நடை பெற்றது. பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஒன்றிய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா, நிதின் கட்காரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியின் போது, மேடைக்குச் சென்ற முன்னாள் ஆளுநரும்- மூத்த பாஜக தலைவருமான தமிழிசை சவுந்தர்ராஜன், அங்கு அமர்ந்து இருந்த தலைவர்களுக்கு கைகூப்பி வணக்கம் தெரிவித்துக் கொண்டே சென்றார். அமித்ஷாவுக்கும் அவர் வணக்கம் தெரிவித்து விட்டு, அந்த இடத்தை விட்டு கடந்தார். அப்போது, தமிழிசை சவுந்தர்ராஜனை தன்னி டம் அழைத்த அமித்ஷா, அவரை மிரட்டும் தொனியில் விரலைக் காட்டிப் பேசினார். தமிழிசை அவருக்கு ஏதோ பதில் சொல்கிறார். எனினும், அதைக் கேட்காமல், நான் சொல்வதைக்  கேளுங்கள் என்ற தொனியில் தமிழிசையை அமித்ஷா மிரட்டுகிறார். 

அமித்ஷா எதைக் குறிப்பிட்டு எச்சரித்தார், தமிழிசை என்ன பதிலளித்தார் என்பது அவர்கள் இருவருக்கும் அல்லது அருகிலிருந்து பார்த்த  குடியரசு முன்னாள் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு போன்றோருக்கு மட்டுமே தெரிந்தது என்றாலும், அமித்ஷா விரல்களைக் காட்டி பேசிய தொனியைப் பார்க்கையில், நிச்சய மாக அவர் தமிழிசை சவுந்தர்ராஜனை மிரட்டினார் என்று மட்டும் உறுதியாகக் கூறலாம். அமித்ஷா வின் உடல் மொழி அவ்வாறு தான் இருந்தது. இந்நிலையில், அமித்ஷாவின் இந்த செய லுக்கு சமூகவலைதளங்களில் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. இதுதான் பாஜக தலை வர்கள் பெண்களை மதிக்கும் லட்சணமா? என்று பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். தமிழ்நாட்டில் அண்ணாமலை பாஜக தலைவ ரான பின், மூத்த தலைவர்கள் பலர் ஓரங்கட்டப் பட்டு விட்டனர். கட்சிக்காக உழைத்தவர்களுக்கு மதிப்பில்லை என்று புலம்பல்கள் அதிகமாகி விட்டன. அண்ணாமலையின் இந்த நட வடிக்கைகளுக்கு கட்சியின் தேசியத் தலைமை யும் ஒத்தூதுகிறது; அமித்ஷா போன்ற தலை வர்கள் கண்மூடித்தனமாக நம்புவதால், அண்ணா மலை தன்னை பெரிய தலைவர் போல  நினைத்து, ஆட்டம் போடுகிறார்; அதனால் தான் மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் பாஜக தோற்றுப் போனது என்று வெளிப்படை யாகவும் பேசி வருகின்றனர்.  குறிப்பாக, “நான் கட்சியில் இருக்கும் போது சில அளவுகோலை வைத்து இருந்தேன். கடுமையாக உழைக்கக் கூடிய தொண்டர்களுக்கு அதிகாரம் கொடுப்பேன்; சிலரை கட்சிக்குள் அனு மதிக்கமாட்டேன். அதாவது சமூக விரோத ரவுடிகள் போல் இருப்பவர்களை கட்சிக்குள் விடவே மாட்டேன். ஆனால் இப்போது சமீப  காலங்களில் கட்சியில் ரவுடிகள் சேர்ந்து உள்ள னர். தற்போதைய மாநிலத் தலைவரின் ஸ்டைல்  வேறாக உள்ளது. ஆனால் சொல்கிறேன்.. நானெல்லாம் இதை அனுமதிக்க மாட்டேன்!”  என்று அண்ணாமலையை வெளிப்படையாகவே தமிழிசை சவுந்தர்ராஜன் சாடியிருந்தார். இந்தப் பின்னணியிலேயே தமிழிசை சவுந்தர்ராஜனை, உள்துறை அமித்ஷா நேரில் எச்சரித்து மிரட்டியதாக கூறப்படுகிறது. எனினும், இதுதொடர்பாக தமிழிசை சவுந்தர் ராஜன் கருத்துக் கூற மறுத்து விட்டார்.