states

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை குறைத்தது, ஐ.நா. அவை!

புதுதில்லி, ஜன. 27 - 2023-ஆம் ஆண்டிற்கான இந்தியா வின் வளர்ச்சிக் கணிப்பை ஐக்கிய நாடுகள் அவை குறைத்துள்ளது. 2023-ஆம் ஆண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5.8 சதவிகித மாகவே இருக்கும் என ஐ.நா. தெரி வித்துள்ளது. இது, கடந்த 2022-இல்  மதிப்பிடப்பட்ட 6.4 சதவிகித வளர்ச்சி யைக் காட்டிலும் 0.6 சதவிகிதம் குறை வாகும். 2023-ல் இந்தியாவின் வளர்ச்சி மிதமான வேகத்திலேயே இருக்கும் என்றும் ஐ.நா. தெரிவித்துள்ளது. ஐ.நா.வின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் துறை, வர்த்தகம் மற்றும் மேம்பாட்டுக்கான ஐ.நா. மன்றம் மற்றும் ஆப்பிரிக்கா, ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன், ஆசியா மற்றும் பசிபிக் மற்றும் மேற்கு ஆசியாவிற்கான பிராந்திய பொரு ளாதார ஆணையங்கள் இதுதொடர் பான அறிக்கையை தயாரித்துள்ளன. உலகெங்கிலும் உள்ள பல மத்திய வங்கிகளைப் போலவே, இந்திய ரிசர்வ் வங்கியும் (RBI) பணவீக்கத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதனொரு பகு தியாக, 2022-இல் பாலிசி ரெப்போ விகி தத்தை 225 அடிப்படை புள்ளிகளை உய ர்த்தியது. இதனால், ரெப்போ விகிதம் 6.25 சதவிகிதம் என்ற அளவிற்கு உயர்ந்தது. அதுமட்டுமல்லாமல், இந்தி யாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 2023-24இல் 6.5 சதவிகிதமாகக் குறையும் என்று ரிசர்வ் வங்கியே கணிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த விரைவான பணவியல் இறுக்கம் வளர்ச்சியைக் குறைக்கும். இத்துடன், வளர்ந்த நாடுகளின் பொருளாதாரத்தில் மந்தநிலை உரு வாவதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன. வட்டி விகிதங்கள்  அதிகரிக்கப்பட்டிருப்பது, பொரு ளாதார வளர்ச்சியில் எதிர்மறையான தாக்கங்களை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, வட்டி விகித உயர்வு முதலீட்டு நட வடிக்கைகளில் பாதிப்பை ஏற்படுத்தும். இதன் மூலம், சர்வதேச ஏற்றுமதி வள ர்ச்சியில் பின்னடைவு உருவாகும். வேலைவாய்ப்புகளும் பாதிக்கப்படும். எனவே, உலகளவில் ஏற்படும், இத்தகைய பொருளாதார சுணக்க நிலை இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். 2023-இல் இந்தியாவின் வளர்ச்சி 5.8 சதவிகிதமாக இருக்கும் என ஐ.நா. கூறியுள்ளது. அதேநேரம், கடந்தாண்டில் 7.1 சதவிகிதத்தை எட்டிய இந்தியாவின் சில்லரைப் பணவீக்கம் 2023-இல்  5.5 சதவிகிதமாக குறையும். சர்வதேச  சந்தையில் பொருட்களின் விலை  குறைவு, ரூபாய் மதிப்பு வலுப்பெறு வது இறக்குமதிக்கான பணவீக்கத்தை குறைக்க உதவும் என்றும் ஐ.நா. கணித்துள்ளது.