காங்கிரஸ், இந்திய மதச்சார் பற்ற முன்னணி ஆகிய கட்சிகளு டன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சு வார்த்தையை இடது முன்னணி நடத்தி வருகிறது. மறுபுறத்தில், தேர்தலை வலுவாக எதிர்கொள் ளும் வகையில், 16 தொகுதிகளுக் கான வேட்பாளர்களையும் இடது முன்னணி அறிவித்து விட்டது. இந்தத் தொகுதிகளில் அறிவிக்கப் பட்ட வேட்பாளர்கள் வீடு, வீடாகச் சென்று மக்களிடம் வாக்கு சேகரிக் கும் பணியைத் தொடங்கி விட்டனர். அறிவிக்கப்பட்டுள்ள 16 வேட்பாளர்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 12, இந் திய கம்யூனிஸ்ட் கட்சி, பார்வர்டு பிளாக், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளின் சார்பில் தலா ஒரு வேட்பாளர் இடம் பெற்றுள்ளனர். 16 பேரில் 14 வேட்பாளர்கள் புதுமுகம் மற்றும் இளைஞர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கொட்டும் மழையில் வரவேற்பு
தம்லுக் மக்களவைத் தொகுதி யில் போட்டியிடும் சியோன் பானர்ஜி, நந்திகிராமின் பல பகுதி களில் பிரச்சாரம் மேற்கொண்டார். சில கிராமங்களில் அவருக்கு ஆத ரவாக ஊர்வலங்கள் நடந்தன. கடந்து செல்லும் ஒவ்வொருரிட மும், அனைத்துக் கடைக்காரர்களி டமும் ஒவ்வொருவராகப் பேசும் உத்தியை இடது முன்னணித் தொண்டர்கள் கடைப்பிடித்து வரு கிறார்கள். அவர்களுடன் வேட்பாள ரும் இணைந்து கொள்கிறார். நந்திகிராமின் டாக்பங்கோ சந்திப்பில் பெரும் ஊர்வலம் இடது முன்னணி வேட்பாளருக்கு ஆத ரவாக நடத்தப்பட்டது. அப்போது பல தரப்பு மக்களும் வேட்பாளர் சியோன் பானர்ஜியைச் சந்தித்துத் தங்கள் பிரச்சனைகளை எடுத்து ரைத்தார்கள். அப்பகுதியில் திரி ணாமுல் மற்றும் பாஜகவினர் செய் யும் ஊழல் நடவடிக்கைகள் குறித் தும் மக்கள் விளக்கினர். அனைத் துத் தரப்பினரின் கருத்தையும் சியோன் பானர்ஜி கேட்டறிந்தார். இந்தப் பகுதிகளில் காலையில் இருந்து மழை பெய்த வண்ணம் இருந்தது. அதைப் பொருட்படுத்தா மல் பிரச்சாரம் நடைபெற்றது. மக்க ளின் அன்புமழையில் வேட்பாள ரும், தொண்டர்களும் நனைந்த வாறே ஊர்வலங்களிலும், மக்கள் சந்திப்பிலும் பங்கேற்றார்கள். தீப்ஷிதா தர் சீராம்பூர் மக்களவைத் தொகுதி யில் இந்திய மாணவர் சங்கத்தின் அகில இந்திய இணைச் செயலா ளரான தீப்ஷிதா தர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வேட்பாள ராகப் போட்டியிடுகிறார். இந்தப் பகுதியிலும் கடும் மழை பெய்தது. ஆனாலும் தங்கள் பிரச்சா ரத்தை நிறுத்தாமல் மக்களைச் சந்திக்கும் பணியில் வேட்பாள ரும், அப்பகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் களும் ஈடுபட்டனர். இந்தப் பிரச்சாரத்தில் ஏராள மான இளைஞர்கள், குறிப்பாக இளம்பெண்கள் பங்கேற்றனர். ஜாங்கிபுராவில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து தொடங் கிய ஊர்வலத்திலும் ஏராளமான இளம்பெண்கள் கலந்து கொண்ட னர். நான்கு கிலோ மீட்டர் வரை யில் சென்ற இந்த ஊர்வலத்தின் நிறைவில் நடந்த தெருமுனைப் பொதுக் கூட்டத்தில் ஏராளமான மக்கள் பங்கேற்றார்கள்.