புதுதில்லி, ஏப்.29- இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்.பி.,யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி புதுதில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திவரும் மல்யுத்த வீராங்கனைகளை காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா சனிக்கிழமை சந்தித்து தனது ஆத ரவை தெரிவித்தார். தொடர்ந்து அவர்களுடன் உரை யாடி தகவல்களைக் கேட்டறிந்தார். பின் னர் செய்தியாளர்களிடம் பிரியங்கா கூறுகையில், “இந்தப் பெண்கள் நாட் டிற்காக பதக்கங்கள் வாங்கிய போது, அவர்கள் நாட்டிற்கு பெருமை சேர்த் துள்ளதாக நாம் அவர்களைக் கொண் டாடினோம். தாங்கள் பாதிக்கப்படுவ தாகக் கூறி அவர்கள் போராடும் போது, அவர்களின் வலியை கேட்க யாரும் தயாராக இல்லை. அவர்களைக் குறை கூறவும் செய்கிறோம். உண்மையில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டிருந் தால் அதன் நகலை வீரர்களுக்கு வழங்க வேண்டும்.
முதலில் பதவி விலக வேண்டும்
அந்த நபர் மீது தீவிரமான குற்றச் சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளது. அவர் முதலில் பதவி விலக வேண்டும். அவர் தொடர்ந்து அந்த பதவியில் இருக்கும் வரை, வீரர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி அவர்களின் வாய்ப்புகளை அழிக்க முடி யும். இந்தநிலையில் வழக்குப்பதிவு, விசாரணைகளுக்கு எல்லாம் அர்த்தம் இல்லாமல் போய்விடும். எனக்கு பிரதமரிடமிருந்து எந்த எதிர் பார்ப்பும் இல்லை. உண்மையில் இந்த வீராங்கனைகள் மீது அவருக்கு அக் கறை இருந்திருந்தால், பிரதமர் இவர் களை அழைத்துப் பேசியிருப்பார். இவர்கள் பதக்கங்கள் வெல்லும் போது இவர்களை பிரதமர் தேநீர் விருந்துக்கு அழைத்திருந்தார். அதனால் அவர் களை அழைத்து பேசுங்கள். அவர்கள் நமது பெண்கள். குற்றம்சாட்டப்பட்டவரை காப் பாற்ற ஏன் இவ்வளவு முயற்சிகள் எடுக்கப்படுகின்றன என்று எனக்குத் தெரியவில்லை. இந்த பெண்கள் வீட் டிற்கும் நாட்டிற்கும் நிறைய செய்தி ருக்கிறார்கள். நீங்கள் அவர்களைப் பாதுகாக்க வேண்டும். ஆனால் அவர் கள் (அரசு) அந்த மனிதரைப் பாது காக்கிறார்கள். நம் பெண்களை நாம் காப்பாற்ற முடியவில்லை என்றால் நாட்டை பற்றி என்னவென்று சொல் வது” என்று கேட்டார்.
மவுனமாக இருக்கும் அரசு
மேலும் இந்தக் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்திய குழு பற்றி கூறுகையில்,”விசாரணைக் குழுக்கள் பற்றி நம் எல்லோருக்கும் தெரியும். அவர்கள் பிரச்சனையை தணிக்கவே செய்வார்கள். பெண்கள் ஒடுக்கப்படும் போது எல்லாம் இந்த அரசாங்கம் மவு னமாகவே இருக்கிறது. பிரதமர் ஒத்துக்கொள்கிறாரோ இல்லையோ, அவரது அமைச்சர்கள் ஒத்துக்கொள்கிறார்களோ இல் லையோ, அரசு ஏற்றுக்கொள்கிறதோ இல்லையோ, ஒட்டுமொத்த நாடும் இந்த பெண்களுடன் நிற்கிறது. அரசு அந்த மனிதரை( பிரிஜ் பூஷன்) காப் பாற்ற விரும்புகிறது. நான் இந்த பெண் களை நினைத்து பெருமைப்படுகிறேன். நாம் அனைவரும் இவர்களுடன் நிற்க வேண்டும்.” இவ்வாறு பிரியங்கா காந்தி தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது, காங்கி ரஸ் தலைவர்கள் பூபேந்திர ஹூடா, தீபேந்திர ஹூடா, உதித் ராஜ் போன் றோரும் வீராங்கனைகளைச் சந்தித்து தங்களின் ஆதரவினைத் தெரிவித்த னர். முன்னதாக, இந்திய மல்யுத்த கூட்ட மைப்பின் தலைவரும், பாஜக எம்.பி., யுமான பிரிஜ் பூஷன் சரண் மீது மல் யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச் சாட்டை கூறி கடந்த ஜனவரி மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக விசா ரணை நடத்த குத்துச்சண்டை வீராங் கனை மேரிகோம் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை மத்திய விளை யாட்டுத்துறை அமைச்சகம் அமைத் தது. இந்தக் குழு விசாரணை நடத்தி தனது அறிக்கையை வழங்கிவிட்டது. எனினும் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இந்நிலையில், வினேஷ் போகத், சாக்சி மாலிக் உள்ளிட்ட வீராங் கனைகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் போராட்டத்தில் ஈடு பட்டு வருகின்றனர். இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக் கல் மனுவினை விசாரித்த நீதிமன்றம் பிரிஜ் பூஷன் மீது வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தியது. அதனைத் தொடர்ந்து இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலை வர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது தில்லி காவல்துறையினர் இரண்டு பிரிவு களின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள னர்.