புதுதில்லி, ஜன.12- பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் குறித்து டுவிட்டர் கருத்தில் இடம் பெற்ற வார்த்தைக்கு, நடிகர் சித்தார்த் மன் னிப்புக் கேட்டுள்ளார். அந்த வார்த்தைக்குப் பின்னால் உள்நோக்கம் எதுவும் இல்லை என்று விளக்கியுள்ளார். “எந்தவொரு நாட்டு பிரதமரின் பாது காப்பும் சமரசம் செய்யப்பட்டால், அந்த நாடு தன்னைத்தானே பாதுகாப்பாக இருப்பதாக கூறிக்கொள்ள முடியாது. பஞ்சாப்பில் பிர தமர் மோடி மீது அராஜகவாதிகளால் நடத் தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை வலு வான வார்த்தைகளில் நான் கண்டிக்கி றேன்” என்று இந்திய பேட்மிண்டன் வீராங் கனை சாய்னா நேவால் டுவிட்டரில் தெரிவித்தி ருந்தார். சாய்னாவின் இந்தப் பதிவை டேக் செய்து, நடிகர் சித்தார்த் விமர்சனம் ஒன்றை வெளி யிட்டார்.
“இறகுப்பந்து உலகின் சாம்பியன்... கடவுளுக்கு நன்றி. எங்களிடம் இந்தியாவின் பாதுகாவலர்கள் உள்ளனர்... விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த பாடகி ரிகானாவுக்கு அவமானம்” என்று தெரி வித்தார். (Subtle cock champion of the world... Thank God we have protectors of India. Shame on you #Rihanna https://t.co/FpIJjl1Gxz) இறகுப்பந்து என்பதை ‘ஷட்டில்காக்’ என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். அதனை நகைச்சுவையாக, கேலி செய்யும் விதமாக ‘சப்ட்டில் காக் - Subtle Cock’ (நுட்பமான சேவல்) என்று டுவீட்டில் குறிப்பிட்டிருந்தார். மோடிக்கு ஆதரவான ‘கூவல் சாம்பியன்’ என்றும் இதில் பொருள் காணலாம். ஆனால், இதில் ‘காக்’ (Cock) என்பதற்கு ஆண்குறி எனவும் ஒரு அர்த்தம் ஆங்கி லத்தில் உள்ளதால், சித்தார்த் மீது விமர் சனங்கள் எழுந்தன. “காக் & புல்” என்பது ஒரு இடியம், அதற்கு பொருள் ‘நடக்கவே முடியாத ஒரு கதையை காரணமாக சொல்வது’. அதாவது நம்மூர் மொழியில் ‘கம்பி கட்டும் கதை’ போன்றது என்று சித்தார்த் விளக்கம் அளித்தார்.
ஆனால், சாய்னா நேவால் பாஜக-காரர் என்பதாலும், சித்தார்த் பாஜக-வுக்கு எதிராக தொடர்ந்து பேசிவருபவர் என்பதாலும் சங்- பரிவாரங்கள் சித்தார்த்திற்கு எதிராகத் திரண்டன. தேசிய மகளிர் ஆணையமும் அவருக்குக் கண்டனம் தெரிவித்தது. இதனிடையே சித்தார்த், சாய்னா நேவா லுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது: “அன்புள்ள சாய்னா, சில நாட்களுக்கு முன்பு உங்கள் டுவீட் ஒன்றிற்கு நான் அளித்த மூர்க்கத்தனமான நகைச்சுவைக்காக (rude joke) உங்களிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். நான் பல விஷயங்களில் உங்களுடன் உடன்படாமல் இருக்கலாம். உங்கள் டுவீட்டைப் படித்தபோது எனக்கு கோபமும், ஏமாற்றமும் ஏற்பட்டிருக்கலாம். அதற்காக எனது வார்த்தைகளை நியா யப்படுத்த முடியாது.
நான் இதைவிட இரக்கம் கொண்டவனே. நான் நகைச்சுவை என்று கருதி அந்த டுவீட்டைப் பதிவிட்டிருந்தா லுமே, அது நல்ல நகைச்சுவை அல்ல. சரி யான கருத்தைக் கொண்டு சேர்க்காத அந்த நகைச்சுவைக்காக வருந்துகிறேன். அதே வேளையில் நான் வார்த்தை விளையாட்டாக பதிந்த அந்த நகைச்சுவை, என்னைச் சாடு வோர் கூறுவதுபோல் இழிவான நோக்கம் கொண்டது அல்ல. நான் உண்மையிலேயே ஒரு திடமான பெண்ணியவாதி. ஒரு பெண் என்பதால் உங்களை விமர்சிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அந்த டுவீட்டை நான் பதிவு செய்யவில்லை. இந்தப் பிரச்சனை யை நாம் முடித்துக் கொண்டு முன்னேற லாம் என நினைக்கிறேன். நீங்கள் எனது மன்னிப்புக் கடிதத்தை ஏற்றுக் கொள்வீர்கள் என நம்புகிறேன். நீங்கள் எப்போதுமே எனது சாம்பியன்தான். நேர்மையுடன் சித்தார்த்!” என்று குறிப்பிட்டுள்ளார். சாய்னாவும், “சித்தார்த் மன்னிப்பு கேட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. அவரை கடவுள் ஆசிர்வதிக்கட்டும்” என்றும் கூறியுள்ளார்.