states

img

தில்லி: மாணவியை கீழே தூக்கி வீசிய அரசுப் பள்ளி ஆசிரியை கைது!

தில்லி அரசுப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு மாணவியை, முதல் தளத்திலிருந்து தூக்கி வீசிய ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.
தில்லியில் உள்ள தில்லி நகர் நிகாம் பாலிகா வித்யாலயா பள்ளியில், ஆசிரியர் கீதா என்பவர் 5-ஆம் வகுப்பு மாணவி வந்தனாவை, கத்திரி கோலால் தாக்கி, பள்ளியின் முதல் தளத்திலிருந்து தூக்கி கீழே வீசியுள்ளார். இது குறித்து மற்ற ஆசிரியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதை அடுத்து, அப்பள்ளிக்கு விரைந்த போலீசார், கீதாவை கைது செய்து, கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்தனர். மேலும், விசாரணை நடத்தி வருகின்றனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி, சிகிச்சை பெற்று வருவதாகவும், அபாயக் கட்டத்தைத் தாண்டிவிட்டதாகவும், தற்போது உயிருக்கு ஆபத்தில்லை என்றும், சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.