states

தில்லி தேர்தல் முடிவுகள் பீகார் தேர்தலில் எதிரொலிக்காது’

பீகார் மாநில சட்டமன்றத்திற்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தகைய சூழலில் தில்லி தேர்தல்  முடிவு பீகார் சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்காது என ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி மறுத்துள்ளார். இதுதொடர்பாக செய்தியா ளர்கள் சந்திப்பில் அவர் மேலும் கூறுகையில்,”ஜனநாயகத்தில் மக்களே உச்சபட்சமான அதி காரம் கொண்டவர்கள். தில்லியில்  27 ஆண்டுகளுக்கு பின்பு பாஜக  ஆட்சியை பிடித்துள்ளது. மக்க ளுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதி கள் நிறைவேற்றப்படும். அவை வெறும் வார்த்தை ஜாலங்களாக மட்டும் இருக்காது. தில்லி தேர்தல் வெற்றி பீகாரில் எதிரொலிக்குமா என்று கேட்கிறீர்கள். பீகார் என்பது  வேறு என்பதை முதலில் இதைப் புரிந்து கொள்ளவேண்டும். பீகாரில்  தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஐக்  கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ் குமார் தலைமை தாங்கு கிறார். 2005 முதல் நிதிஷ் குமார்  முதல்வராக இருந்தாலும் இரண்டு  முறை ஆர்ஜேடியின் உதவியுடன் முதல்வராக நீடித்தார். இங்கு அர சியல் களம் வேறு. அதனால் தில்லி  தேர்தல் முடிவு பீகார் சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்காது” என அவர் கூறினார்.