states

img

லக்கிம்பூர்கேரியில் மற்றுமொரு கொடூரம்: தலித் சகோதரிகள் பாலியல் வன்கொலை

லக்னோ, செப்.15- உத்தரப்பிரதேசம் லக்கிம்பூர்கேரி யில் சிறுமிகளான தலித் சகோதரி கள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கழுத்தை நெரித்து கொல்லப்பட்ட னர். 15 மற்றும் 17 வயதுடைய சகோதரி கள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் கைப்பற்றப்பட்டது. இதுதொடர் பாக ஆறு நபர்களை காவல்துறை யினர் கைது செய்துள்ளனர். இருசக்கர வாகனங்களில் வந்த இளைஞர்கள் சிறுமிகளை கடத்திச் சென்று கொன்றதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். ஆனால் காவல்துறையினர் முதலில் அதை மறுத்தனர். சிறுமிகளின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை என காவல்துறையினர் தெரிவித்தனர். ஆனால், உடற்கூராய்வு அறிக்கை வந்த பிறகு, சிறுமிகள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு, கழுத்தை நெரித்து கொல்லப்பட்டதை காவல்துறையினர் உறுதி செய்தனர். லக்கிம்பூர்கேரியில் ஒரு கரும்பு தோட்டத்தில் உள்ள மரத்தில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. புதன்கிழமை மதியம் சிறுமிகள் காணாமல் போனா ர்கள். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சிறுமிகளை முன்பே தெரியும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். காதலிப்பது போல் நடித்து அவர்களை சிக்க  வைத்துள்ளனர்.

திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டபோது கழுத்தில் துப்பட்டாவால் இறுக்கி கொலை செய்தது தெரியவந்துள்ளது. கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் லக்னோ ரேஞ்ச்  ஐஜி லட்சுமி சிங் மற்றும் லக்கிம்பூர் கேரி காவல் கண்காணிப்பாளர் சஞ்சீவ் சுமன் ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். அமைச்சரின் மகன் விவசாயிகள் மீது கார் ஏற்றி கொலை செய்த சம்பவம் உட்பட விவ சாயிகள், தலித்துகள், சிறுபான்மை யினருக்கு எதிரான தாக்குதல்களின் தொடர்ச்சியாக தற்போது 2 சிறுமிகள் பாலியல் வன்கொலை செய்யப் பட்டிருப்பது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

;