states

img

தெலுங்கானா வீராங்கனைக்கு சிபிஎம் அஞ்சலி

புதுதில்லி, மார்ச் 20- கட்சியின் முதுபெரும் தோழரும், தெலுங் கானா விடுதலைப் போராட்ட வீராங்கனையுமான தோழர் மல்லு ஸ்வராஜ்யம் காலமானார். அவ ருக்கு வயது 91. இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமை க்குழு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும், விடுதலைப் போராட்ட வீராங்க னையுமான மல்லு ஸ்வராஜ்யம் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு தெரிவித்துக்கொள்கிறது. தோழர் மல்லு ஸ்வராஜ்யம், இளம் மங்கை யாக இருந்தபோதே, நிசாம் நிலப்பிரபுத்துவ ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். 1946 முதுல் 1951 வரை நடைபெற்ற தெலங்கானா ஆயுதப் போராட்டத்தில் பங்கேற்றார். ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு பயிற்சி எடுத்துக்கொண்டது டன், பல பெண்களை போராட்டத்தில் பங்கேற்க வைப்பதற்கு உத்வேகத்தை ஊட்டினார்.

தோழர் மல்லு ஸ்வராஜ்யம், சமூகத் தளைகள் பலவற்றை அறுத்தெறிந்துவிட்டு, ஒடுக்கப் பட்ட மக்களுடன் நின்றார். கடந்த எழுபதாண்டு காலமாக கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தொடர்ந்து பணியாற்றி வந்தார். தோழர் மல்லு ஸ்வராஜ்யம், ஒன்றுபட்ட ஆந்திரப்பிரதேச சட்டமன்றத்திற்கு இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் கட்சி யின் மத்தியக்குழுவிற்கு 2002இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் சிறப்பு அழைப்பாளராக இருந்து வந்தார். தோழர் மல்லு ஸ்வராஜ்யத்தின் புரட்சிகர வாழ்க்கைக்கு அரசியல் தலைமைக்குழு அஞ்சலியைச் செலுத்திக்கொள்கிறது. அவரு டைய குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் களைத் தெரிவித்துக் கொள்கிறது.  இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிருந்தா காரத், சுபாஷினி அலி ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். வெங்கையநாயுடு இரங்கல் குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு, ஆந்திரா மற்றும் தெலுங்கானா முதல்வர்கள் ஜெகன்மோகன் ரெட்டி, கே.சந்திரசேகர ராவ், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு, ஜனசேனா தலைவர் பவன் கல்யாண் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.