புதுதில்லி,ஜன.9- நாடாளுமன்ற ஊழியர்கள் 402 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. தலைநகர் தில்லியில் கொரோனாவால் பாதிக்கப் பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தொற்று பரவ லால் அனைத்து அரசு அலுவலகங்களும் 50 சதவீத பணி யாளர்களுடன் மட்டுமே இயங்க வேண்டும் என்று தில்லி அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் பணியாற்றும் 1,409 ஊழியர்களுக்கு ஜனவரி 4 முதல் 8 ஆம் தேதி வரையில் பரிசோதனை செய்யப்பட்டது.இதில் 402 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற அதிகாரிகள் தெரிவித்தனர். தொற்று உறுதியானவர்களின் மாதிரிகள் மரபணு வரிசை பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நாடாளு மன்ற ஊழியர்கள் அனைவரும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.