புதுதில்லி, ஜூன் 11- குறுவைப் பருவத்திற்கான ஒன்றிய அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலைகள் நியாயமற் றவை எனவும், விவசாயிகளுக்கு கடும் இழப்பு களை ஏற்படுத்தும் என்றும் அகில இந்திய விவ சாயிகள் சங்கம் விமர்சித்துள்ளது. இதுதொடர்பாக, விவசாயிகள் சங்கத்தின் தலைவர் டாக்டர் அசோக் தாவ்லே, பொதுச் செயலாளர் டாக்டர் விஜூ கிருஷ்ணன் ஆகி யோர் விடுத்துள்ள விரிவான அறிக்கை வரு மாறு: குறுவைப் பருவத்திற்கான நெல், உளுந்து, கம்பு, பருத்தி, சூரியகாந்தி விதை, நிலக்கடலை உள்ளிட்ட 14 வகை வேளாண் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை ஒன்றிய அரசு அறிவித்துள் ளது. இதன்படி, ஏற்கெனவே இருந்த விலை யில், நெல்லுக்கு 7 சதவிகிதம், எள்ளுக்கு 10.3 சத விகிதம், நிலக்கடலைக்கு 9 சதவிகிதம், ஜவ்வ ரிசி, கம்பு, கேழ்வரகு, முந்திரி, சோளம், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றுக்கு 10.4 சதவிகிதமும் ஆதரவு விலை உயர்த்தப் பட்டுள்ளது.
கடந்த பருவத்தில் குவிண்டால் ஒன்றுக்கு 2 ஆயிரத்து 40 ரூபாயாக இருந்த நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை தற்போது குவிண் டாலுக்கு 2 ஆயிரத்து 183 ரூபாயாக நிர்ணயிக் கப்பட்டுள்ளது. இதுவே கிரேடு ‘ஏ’ ரகத்துக்கு 2 ஆயிரத்து 203 ரூபாயாக விலை நிர்ண யிக்கப்பட்டுள்ளது. இதேபோல சோளம் குவிண்டாலுக்கு 2 ஆயிரத்து 990 ரூபாயிலிருந்து 3 ஆயிரத்து 225 ரூபாயாகவும், சோளம் ஒட்டு ரகத்திற்கு 2 ஆயி ரத்து 970 ரூபாயிலிருந்து 3 ஆயிரத்து 180 ரூபா யாகவும், கம்புக்கு 2 ஆயிரத்து 350 ரூபாயிலி ருந்து 2 ஆயிரத்து 500 ரூபாயாகவும், கேழ்வர கிற்கு 3 ஆயிரத்து 578 ரூபாயிலிருந்து 3 ஆயி ரத்து 846 ரூபாயாகவும், மக்காச் சோளத்திற்கு ஆயிரத்து 962 ரூபாயிலிருந்து 2 ஆயிரத்து 90 ரூபாயாகவும், துவரம் பருப்புக்கு 6 ஆயி ரத்து 600 ரூபாயிலிருந்து 7 ஆயிரம் ரூபாயாக வும், பாசிப் பயிறுக்கு 7 ஆயிரத்து 755 ரூபாயி லிருந்து 8 ஆயிரத்து 558 ரூபாயாகவும், உளுந் துக்கு 6600 ரூபாயிலிருந்து 6 ஆயிரத்து 950 ரூபா யாகவும், நிலக்கடலைக்கு 5 ஆயிரத்து 850 ரூபா யிலிருந்து 6 ஆயிரத்து 377 ரூபாயாகவும், சூரிய காந்தி விதைக்கு 6 ஆயிரத்து 400 ரூபாயிலி ருந்து 6760 ரூபாயாகவும், சோயாபீனுக்கு (மஞ் சள்) 4 ஆயிரத்து 300 ரூபாயிலிருந்து 4 ஆயி ரத்து 600 ரூபாயாகவும் குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
குறுவைப் பருவத்திற்கான மேற்கண்ட குறைந்தபட்ச ஆதரவு விலைகள் அறிவிப்பு நியாயமற்றது. இது விவசாயிகளின் நம் பிக்கையை பொய்யாக்குகிறது. மேலும் அவர்களின் வருமானத்தில் பெரும் இழப்பை ஏற்படுத்துகிறது. கடந்த காலங்களில் விவ சாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசினார். ஆனால் அவரது தலைமையிலான அரசின் அறிவிப்பு வேறுபட்டதாகவே உள்ளது. நியா யமற்ற இந்த குறைந்தபட்ச ஆதரவு விலைகளு டன் இணைந்து இடுபொருள் செலவுகள் பெரும்பாலான விவசாயிகளை, குறிப்பாக சிறு, குறு மற்றும் நடுத்தர விவசாயிகள் மற்றும் குத்தகைதாரர்களை கடனில் தள்ளும். சுவாமிநாதன் கமிஷனின் சி2+50% (மொத்த உற்பத்திச் செலவு + அதில் 50 சதவீதம்) பரிந்து ரையின்படி குறைந்தபட்ச ஆதரவு விலைகள் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அளித்த நீண்டகால வாக்குறுதியுடன் இந்த அறிவிப்பு பொருந்தவில்லை. ஒன்றிய அரசு சி2+50% எனும் பரிந்துரையை செயல்படுத்தாததால் நெல் விவசாயிகளுக்கு ஒரு குவிண்டாலுக்கு சுமார் ரூ.683.50 வரை இழப்பு ஏற்படுகிறது. அரசின் மதிப்பீட்டின்படி ஹெக்டேருக்கு 4 டன்கள் உற்பத்தித் திறனாகக் கருதினால் ஹெக்டேருக்கு ரூ. 27,340 வரை இழப்பு ஏற்படும் நிலை உருவாகும். சி2 செலவைக் கணக்கில் கொண்டால் துவரை, பாசிப்பயறு, உளுந்து, சூரியகாந்தி, எள் மற்றும் பருத்தி ஆகிய வற்றில் ஒரு குவிண்டாலுக்கு ரூ. 2,000 முதல் ரூ. 3,000 வரை அதிகமான இழப்பு ஏற்படும்.
ஆந்திரப்பிரதேசம், பீகார், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப், தமிழ்நாடு, தெலுங்கானா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் நெல்லுக்கான தோராய உற் பத்திச் செலவின் மதிப்பீடுகள் சிஏசிபி (CACP - விவசாய செலவுகள் மற்றும் விலைகளுக்கான ஆணையம்) கணிப்புகளை விட அதிகமாக உள்ளது. மேலும் பல்வேறு மாநிலங்களின் தோராய மதிப்பீடுகளும் சிஏசிபி கணிப்புகளை விட அதிகமாக உள்ளன. உண்மையில் சிஏசிபி முதலில் மாநிலங்க ளில் உற்பத்திச் செலவைக் குறைத்துக் காட்டு கிறது; பின்னர் அகில இந்திய விலைக் கணிப்பு களுக்கு மாநிலங்களின் சராசரியை கணக்கில் கொள்கிறது. உதாரணமாக, கேரளாவில் நெல்லுக்கான சி2 விலை மாநிலத்தால் கணிக் கப்படும் போது குவிண்டாலுக்கு ரூ.2,847 என்ற நிலையில், சிஏசிபியின் மதிப்பீட்டில் ரூ. 2,338 மட்டுமே இருக்கும். அதே போல பஞ்சாப் மாநில நெல் லுக்கான சி2 விலை குவிண்டா லுக்கு ரூ. 2,089 என்ற நிலையில், சிஏசிபியானது குவிண்டாலுக்கு ரூ.1,462 என்று மதிப்பிட்டுள்ளது. நெல்லைப் போலவே துவரையும் உள்ளது. கர்நாடகாவில் துவரைக்கான சி2 செலவு கள் குவிண்டாலுக்கு ரூ. 9588 என்ற நிலை யில், சிஏசிபி ரூ.5744 என்று மட்டுமே மதிப்பிட் டுள்ளது. பருத்தியைப் பொறுத்தவரை தெலுங் கானா மாநிலக் கணிப்புகள் குவிண்டாலுக்கு ரூ.11,031 என்ற நிலையில், சிஏசிபி மதிப்பீடு ரூ. 6264 என குறைவாக உள்ளது. இது குவிண்டா லுக்கு ரூ. 4,767 மேலும் குறையவும் வாய்ப் புள்ளது.
செலவுகளின் கணக்கீடுகளிலேயே விவ சாயிகள் முதலில் ஏமாற்றப்படுகிறார்கள். அதிக உற்பத்திச் செலவுகளைக் கொண்ட மாநிலங்களில் உள்ள விவசாயிகள் இரண்டா வது முறை ஏமாற்றப்படுகிறார்கள். ஏனெனில் சராசரி என கணக்கிடப்பட்ட செலவு அவர்களின் உண்மையான செலவை விட எப்போதும் குறை வாக இருக்கும். மூன்றாவது முறையாக விவ சாயிகள் ஏமாற்றப்படுவது, இந்த குறைந்த பட்ச ஆதாரவிலையானது, பெரும்பாலான சந்தர்ப்பங்களில் உறுதியான கொள்முதல் இல்லாததால், பெரும்பாலும் கற்பனையான அல்லது வெறும் காகிதத்திலேயே இருக்கும். உற்பத்தி போனஸ் அல்லது ஊக்கத்தொகை வழங்கும் கேரளா, ஜார்க்கண்ட், தமிழ்நாடு மற்றும் பீகார் போன்ற மாநிலங்களை, சிஏசிபி மற்றும் ஒன்றிய அரசு அதைத் தடுக்க முயற் சிக்கிறது. இப்படி பல்வேறு சிக்கல்கள் இருப்பதால் பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு சி2+50% சூத்திரத்தின்படி குறைந்தபட்ச ஆதாரவிலை யை உயர்த்தி, கொள்முதல் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என்று அகில இந்திய விவ சாயிகள் சங்கம் வற்புறுத்துகிறது. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
மேலும் ஜம்மு - காஷ்மீர் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை கவலையுடன் குறிப்பிட் டுள்ள அகில இந்திய விவசாயிகள் சங்கம், ஜம்மு -காஷ்மீரையும் உள்ளடக்கி அங்குள்ள விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது. நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசாங்கத்தால் விவசாயிகளுக்கு இழைக் கப்பட்ட துரோகத்திற்கு எதிராகவும் களமிறங்கு மாறு அனைத்துக் கிளைகளுக்கும் அழைப்பும் விடுத்துள்ளது.