states

img

பிரதமர் மோடியின் பாதுகாப்பு ஒத்திகையின் போது சிறுவன் மீது கொடூரத் தாக்குதல்

பிரதமர் மோடியின் பாதுகாப்பு ஒத்திகையின் போது சிறுவன் மீது கொடூரத் தாக்குதல்

பிரதமர் மோடி தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ, குஜராத் மாநிலத்திற்கு 2 நாள் (மார்ச் 7,8) சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மோடி வருகையை முன்னிட்டு குஜராத் மாநிலம் சூரத் அருகே ரத்தன் சௌக் பகுதியில் அம் மாநில காவல்துறையினர் பாது காப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். அப்போது  உள்ளூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் தவறுத லாக காவல்துறையினர் பாதுகாப்பு  ஒத்திகை நடைபெறும் இடத்திற்கு சைக்கிளில் சென்றுள்ளான்.  உடனே மோர்பி மாவட்ட காவல் உதவி ஆய்வாளர் பி.எஸ்.காத்வி, “இங்கே வர உனக்கு என்ன தைரியம்” என கேள்வி எழுப்பி சிறு வனின் கழுத்தை பிடித்தும், முடியை பிடித்து இழுத்தும் கன்னத்தில் சரமாரியாக அடித்துள் ளார். சிறுவன் மீதான தாக்குதலுக்கு உள்ளூர் மக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் இதுதொ டர்பான வீடியோ சமூகவலைத் தளங்களில் கண்டனக் கருத்துக்க ளுடன் வைரலாகி வருகின்றன. இந்நிலையில், சிறுவன் மீது தாக்குதல் நடத்திய காவல் உதவி ஆய்வாளர் பி.எஸ்.காத்வி கட்டுப் பாட்டு அறைக்கு மாற்றப்படுவ தாகவும், இந்த சம்பவம் முற்றி லும் பொருத்தமற்றது மற்றும் வருந்தத்தக்கது எனவும் மாவட்ட காவல்துறை உதவி ஆணையர் அமிதா வனானி  தெரிவித்துள்ள தாக செய்திகள் வெளியாகி யுள்ளன.