புதுதில்லி,அக்.24- 40 தொகுதிகளை கொண்ட மிசோ ரம் மாநிலத்தில் நவம்பர் 7 அன்று ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடை பெறுகிறது. பாஜகவின் தேசிய ஜன நாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மிசோ தேசிய முன்னணி (எம்என்எப்) கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் முனைப் பிலும், பாஜக கூட்டணி ஆட்சியை துரத்த காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. வரும் 30-ம்தேதி அன்று மிசோரம் மாநி லத்தின் மேற்கு பகுதியில் பிரதமர் மோடி தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், பாஜக கூட்ட ணியில் உள்ள முதல்வர் ஜோரம் தங்கா, பிரதமர் மோடியுடன் இணைந்து பிரச்சா ரம் மேற்கொள்ளப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். இதுகுறித்து ஜோரம் தங்கா கூறுகையில், “மிசோ ரம் மாநிலத்தில் வாழும் மக்கள் அனை வரும் கிறிஸ்தவர்கள். மணிப்பூரில் தேவாலயங்களை எரித்தபோது எங்கள் மக்கள் அதற்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்தனர். இத்தகைய சிக்கலான சூழ லில் பாஜகவுடன் நாங்கள் பரிவு காட்டு வது எங்கள் கட்சிக்கு பின்னடைவாக அமையலாம். அதனால் பிரதமர் மோடி தனியாக பரப்புரை மேற்கொள்வதும், நான் தனியாக பரப்புரை மேற்கொள் வதும் தான் சரியாக இருக்கும்” என அவர் தெரிவித்துள்ளார். மிசோரம் கூட்டணி கட்சியின் முதல்வர் ஜோரம் தங்காவின் இந்த அறிவிப்பு பாஜகவுக்கு கடும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.