புதுதில்லி, நவ. 14 - கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுவோர் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் அமர்வு கூறியுள்ளது. இதுதொடர்பாக பிரமா ணப் பத்திரம் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது. சூனியம், மூடநம்பிக்கை மற்றும் கட்டாய மத மாற்றங் களை தடுக்க ஒன்றிய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறுபான்மையினரைக் குறி வைத்து, பாஜக தலைவர்களில் ஒருவரும் வழக்கறிஞ ருமான அஸ்வினி குமார் உபாத்யாய உச்ச நீதி மன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.ஆர். ஷா மற்றும் ஹீமா கோலி அமர்வு முன்பு திங்களன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டு, ஒன்றிய அரசு நவம்பர் 22-ஆம் தேதிக்குள் தனது நிலைபாட்டைத் தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். அப்போது மதமாற்றம் குறித்து சில கருத்துக்களையும் அவர் தெரிவித்தனர்.
“கட்டாய மதமாற்றம் மிகவும் தீவிரமான பிரச்சினை” என்றும், “இது நாட்டின் பாதுகாப்பு மற்றும் மத சுதந்திரத்தை பாதிக்கிறது” என்றும் கூறிய நீதிபதிகள், “கட்டாய மதமாற்றம் நிறுத்தப்படாவிட்டால் மிகவும் கடின மான சூழ்நிலை உருவாகும்” என்று எச்சரிக்கை விடுத்த னர். மேலும், “மதச் சுதந்திரம் இருக்கலாம், ஆனால் கட்டாய மதமாற்ற சுதந்திரம் இல்லை. இது நாட்டின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமையும். இது தொடர்பாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளனர். சிறுபான்மையினரைக் குறிவைத்து, ஏற்கெனவே பாஜக ஆளும் மாநிலங்களில் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டு உள்ளன. மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ஹரியானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த சட்டங்கள் நடைமுறை யிலும் உள்ளன. கட்டாய மதமாற்றம் செய்பவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கும் வகை யில் இந்த மாநிலங்களில் சட்டத் திருத்தங்களும் செய்யப் பட்டு உள்ளன. இந்தப் பின்னணியில் நாடு முழுவதுமே மதமாற்றத் தடை என்ற பெயரில் சிறுபான்மையினரை ஒடுக்கும் முயற்சியில் பாஜக தலைவர்கள் இறங்கியுள்ளனர். இந்த வழக்கின் அடுத்த விசாரணை நவம்பர் 28-ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.