states

வேலையின்மை, விலைவாசி உயர்வால் மக்கள் துயரம் பாஜக-வின் வெற்று முழக்கங்கள் 2024 தேர்தலில் பலிக்காது!

புதுதில்லி, ஜூலை 5 - பாஜக-வின் வெற்று முழக்கங்க ளுக்கு 2024 தேர்தலில் மக்கள் பதில ளிப்பார்கள் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள் ளார்.  இதுகுறித்து அவர், தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “மோடி அரசின் கொள்ளையால் பணவீக்கம், வேலையில்லாத் திண் டாட்டம் இரண்டும் தொடர்ந்து அதிக ரித்து வருகிறது. ஆனால், பாஜக அதிகார வெறியில் மூழ்கியிருக்கிறது.  காய்கறிகளின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வரு கிறது. நாட்டில் வேலையின்மை விகி தம் 8.45 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. கிராமங்களில் வேலையின்மை விகிதம் 8.73 சதவிகிதமாக உள்ளது. கிராமங்களில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் தேவை அதிகமாக உள்ளது, ஆனால் வேலை இல்லை. கிராமப்புற ஊதிய விகிதம் குறைந்துள்ளது.  இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ஜி, உங்கள் தோல்விகளை விளம்பரங்களின் மூலம் மறைத்துவிட வேண்டும் என்பதற்காகவே நீங்கள் தேர்தலுக்கு முன்னதாக ‘அச்சே தின்’ (நல்ல நாட்கள் வந்துகொண்டி ருக்கின்றன), ‘அமிரித் கால்’ (நாடு சுதந்திரமடைந்த 75 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் விழா) போன்ற முழக்கங்களை முன்வைத்து செயல்படுகிறீர்கள் என்பது நாட்டு மக்களுக்கு தெரியும்.  ஆனால் இந்த முறை அது நடக் காது, மக்கள் விழிப்புணர்வு அடைந்து, பாஜக-வுக்கு எதிராக வாக்களித்து உங்கள் வெற்று முழக்கங்களுக்கு பதிலளிப்பார்கள். பாஜக-வை ஆட்சி யில் இருந்து அகற்றுவார்கள்.”  இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே குறிப்பிட்டுள்ளார்.

;