தில்லி உயர்நீதிமன்றத்திற்கு 4 புதிய நீதிபதிகளை நியமித்து சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
2022 பிப்ரவரி 1 ஆம் தேதி நடைபெற்ற உச்ச நீதிமன்ற கொலீஜியம் கூட்டத்தில், தில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நீதித்துறை அதிகாரிகளான ஸ்ரீமதி நீனா பன்சால் கிருஷ்ணா, தினேஷ் குமார் ஷர்மா, அனூப் குமார் மெந்திரட்டா மற்றும் சுதிர் குமார் ஜெயின் ஆகியோரை தில்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளாக நியமிக்க ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது.
அந்தவகையில், ஒன்றிய அரசின் பரிந்துரையை ஏற்று இந்த 4 பேரையும் தில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை (பிப்.25) இன்று வெளியிடப்பட்டது.
அதனடிப்படையில், நீனா பன்சால் கிருஷ்ணா, தினேஷ் குமார் சர்மா, அனூப் குமார் மெண்டிரட்டா, சுதிர் குமார் ஜெயின் ஆகியோரை டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமித்தனர்.
இவர்கள் விரைவில் தில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகளாக பதவி ஏற்பார்கள் என எதிர்ப்பார்க்ப்படுகிறது.