அகமதாபாத், டிச. 2 - குஜராத் சட்டப்பேரவைக்கான முதற் கட்டத் தேர்தலில் 63.14 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 2017 தேர்தலில் 66.75 சதவிகித வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில், இந்த முறை சுமார் 4 சதவிகிதம் அளவிற்கு வாக்குப்பதிவு குறைந்துள்ளது. 182 இடங்களைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு, டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முதற்கட்டத் தேர்தல் வியாழனன்று நடை பெற்றது. சௌராஷ்டிரா - கட்ச் மற்றும் மாநி லத்தின் தெற்குப் பகுதிகளில் உள்ள 19 மாவட்டங்களுக்கு உட்பட்ட 89 தொகுதி களுக்கு இந்த தேர்தல் நடைபெற்றது. பழங்குடியினர் அதிகம் உள்ள நர்மதா மாவட்டத்தில் அதிகபட்சமாக 78.24 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளன. அதைத் தொடர்ந்து, பழங்குடியினர் அதிகம் வசிக்கும் வியாரா மற்றும் நிசார் சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய தாபி மாவட்டத்தில் 76.91 சதவிகிதம், நவ்சாரியில் 71.06 சதவிகிதம் என்று வாக்குகள் பதிவாகி யுள்ளன.
இருப்பதிலேயே குறைந்தபட்சமாக போடாட் மாவட்டத்தில் 57.58 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. அம்ரேலி மாவட்டத்தில் 57.59 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. குஜராத்தின் மக்கள் தொகையில் 15 சதவிகித பழங்குடியினர் உள்ளனர். 2017-இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்த லில் குஜராத்தில் பாஜக வென்று ஆட்சியைப் பிடித்தாலும், பழங்குடி மக்களுக்காக ஒதுக்கப்பட்ட 27 சட்டமன்ற தொகுதிகளில், பாஜகவுக்கு 9 தொகுதிகள் மட்டுமே கிடைத் தன. காங்கிரஸ் 15 இடங்களில் வெற்றி பெற்றது. தற்போது அந்த பழங்குடியினர் தொகுதிகளில்தான் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த வாக்குகள் நிச்சய மாக பாஜக-வுக்கு எதிராகவே இருக்கும் என்று காங்கிரஸ் தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். சௌராஷ்டிரா பகுதியும்- அண்மையில் தொங்கு பாலம் அறுந்து விழுந்து 135 உயிரைக் காவுவாங்கிய பகுதியுமான மோர்பி தொகுதியில் 67.16 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. இங்கு கடந்த தேர்தலில் 71.74 சதவிகித வாக்குகள் பதிவாகி யுள்ளன.