சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்த ஆண்டு சந்தா
நாடு முழுவதும் சுங்கச்சாவடி களில் கட்டணம் செலுத்தும் முறையில் ஆண்டு சந்தா முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆண்டு சந்தாவின் கட்டணம் ரூ. 3,000 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்து க்கு உட்பட்ட சுங்கச் சாவடி வழியாகச் செல்லும் வாகனங்களுக்கு சுங்கக் கட்ட ணம் வசூலிப்பதில் ஏற்படும் தாமதம் மற்றும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக கடந்த 2019ஆம் ஆண்டு ஃபாஸ்டேக் முறை அறிமுகம் செய்யப்பட்டது. ஃபாஸ்டேக் அறிமுகம் செய்யப் பட்ட பிறகு, வாகனங்களின் முன்பகுதி யில் ஒட்டப்படும் ஃபாஸ்டேக் ஸ்டிக்கர் மூலம் சுங்கச்சாவடிகளை கடக்கும் வாகனங்களுக்கு எண்ம முறையில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், அதிகளவில் சுங்கச்சாவடிகளைப் பயன்படுத்தும் நான்கு சக்கர வாகனங்களுக்காக ஃபாஸ்டேக் ஆண்டு சந்தா திட்டத்தை மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி அறிமுகம் செய்துள்ளார். வருகின்ற ஆகஸ்ட் 15 முதல் இந்த திட்டம் அமலுக்கு வருகின்றது. இவை வணிக வாகனங்களுக்கு பொருந்தாது. சொந்த பயன்பாட்டு வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்த திட்டமா னது 60 கி.மீ. சுற்றளவுக்குள் மட்டுமே பொருந்தும். ஆண்டு சந்தா செலுத்திய தில் இருந்து ஓராண்டுக்கு 200 பயணங் கள் மட்டுமே செய்ய முடியும்.