states

குஜராத் தேர்வுகளில் ஊழல்கள்

புதுதில்லி, டிச. 23- குஜராத் மாநிலத்தில் தலைமை எழுத்தர்களைத் தேர்வு செய்வதற்காக நடைபெறவிருந்த தேர்வின் கேள்வித் தாள் முன்கூட்டியே வெளியாகிவிட்ட தால், அத்தேர்வு நடத்தப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. குஜராத் மாநிலத்தில் காலியாக இருந்த 186 இடங்களுக்காக இத் தேர்வு டிசம்பர் 12 அன்று நடைபெற விருந்தது. இத்தேர்வினை 88 ஆயிரம் பேர் எழுதவிருந்தனர். ஆனால் கேள்வித் தாள் முன்கூட்டியே  வெளியாகி விட்டதால், இத்தேர்வு ரத்து செய்யப் பட்டது.  இதுதொடர்பாக காவல்துறை யினர் 14 பேரைக் கைதுசெய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

இதுவரை ஒன்பது தேர்வுகள் ரத்து 

இவ்வாறு தேர்வுக்கு முன்பே தேர்வுத்தாள் வெளியாவது என்பது குஜ ராத் மாநிலத்தில் அதிசயம் ஒன்றுமல்ல. உண்மையில் 2014 ஆண்டுக்குப் பிறகு பல்வேறு பணியிடங்களுக்காக நடை பெற்ற தேர்வுகள், அவற்றின் கேள்வித் தாள்கள் முன்கூட்டியே வெளி யானதால், ரத்து செய்யப்பட்டிருக் கின்றன. இவ்வாறு இதுவரை ஒன்பது தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருக் கின்றன. நகராட்சியின் தலைமை அதிகாரிக்கான பணியிடங்கள், அரசுப் பள்ளி ஆசிரியர்கள், மாவட்டப் பஞ்சா யத்து அலுவலகங்களில் எழுத்தர்கள், செவிலியர் பணியிடங்கள்  எனப் பல்வேறு தரப்பினரையும் தேர்வு செய்வதற்காக நடைபெறவிருந்த பல்வேறு தேர்வுகள் ரத்து செய்யப் பட்டிருக்கின்றன. “ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசு  நிர்வாகத்தால் ஆட்கள் தேர்வு செய்யப் படுவதற்காக நடத்தப்படும் ஏதேனும் ஒரு தேர்வு, அத்தேர்வின் கேள்வித்தாள் முன்கூட்டியே வெளியாகிவிடுவதால், ரத்து செய்யப்பட்டு வருகின்றன” என்று குஜராத் காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளர் மணீஷ் தோஷி கூறினார்.  “குஜராத்தில் பல்வேறு வகை யினங்களுக்கும் ஆள்சேர்ப்பு முகமை களின் தலைவர்களாக ஆர்எஸ்எஸ்/பாஜக-வுடன் இணைந்த நபர்கள் நிய மிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களும்  இந்த மோசடியுடன் சம்பந்தப்பட்டி ருக்கிறார்கள்” என்று அவர் மேலும் கூறினார்.  (ந.நி.)