புதுதில்லி, ஏப்.3- அதானியின் ஊழல், ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பு விவகாரங்களால் ஏற் பட்ட அமளி காரணமாக, 14-ஆவது நாளாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங் கின. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்டம் அமர்வுகள் மார்ச் 13 அன்று துவங்கின. ஆனால், அதானியின் ஊழல் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசார ணைக்கு உத்தரவிடுவதில் ஒன்றிய பாஜக அரசு பிடிவாதம் காட்டி வருவதால், துவங்கிய நாளிலிருந்து நாடாளுமன்றம் முடங்கி வரு கிறது. கடைசியாக மார்ச் 29-ஆம் தேதி நாடா ளுமன்றம் கூடியபோதும், 13-ஆவது நாளாக அமளி ஏற்பட்டு, ஏப்ரல் 3-ஆம் தேதி வரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில் 4 நாட்கள் இடைவெளிக் குப் பின்னர் நாடாளுமன்றம் திங்களன்று கூடி யது. மக்களவை காலை 11 மணிக்கு கூடிய தும் மார்ச் 29 அன்று காலமான பாஜக நாடாளு மன்ற உறுப்பினர் கிரிஷ் பாபட்-க்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பிற்பகல் 2 மணி வரை மக்களவை ஒத்திவைக் கப்பட்டது. இதேபோல மாநிலங்களவை காலையில் கூடியதும், அன்றைய அலுவல்களைப் பட்டி யலிடும்படி மாநிலங்களவைத் தலைவர் ஜக தீப் தன்கர் அழைப்பு விடுத்தார். அப்போது, அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி, பிரதமர் மோடி, அதானி பெயர்களை குறிப்பிட்டு, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதனால், மாநி லங்களவையும் பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர், இரு அவைகளும் பிற்பகலில் கூடியபோதும் ராகுல் காந்தியின் பதவி பறிப்பு விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கிளப்பின. மக்களவையில், சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு, காங்கிரஸ் எம்.பி.க்கள் முழக்கம் எழுப்பியதால் ஏப்ரல் 5 காலை வரை மக்களவை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். ஏப்ரல் 4 - மகாவீரர் ஜெயந்தியையொட்டி நாடா ளுமன்றத்திற்கு விடுமுறையாகும்.