புதுதில்லி, மே 4 - தில்லியில் போராடும் மல்யுத்த வீராங் கனைகள் மீது, குடிபோதையில் சென்று தில்லி காவல்துறையினர் நடத்திய தாக்கு தல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலை யில், இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரி வித்துள்ளனர். இதுதான் 'பேட்டி பச்சாவோ' எனும் பெண் குழந்தைகளைக் காக்கும் லட்சமணமா என்று ஒன்றிய பாஜக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளனர்.
பாலியல் பாஜக எம்.பி.,
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலை வரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் (67) மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த ஜனவரி மாதம் புகார் எழுந்தது. இது தொடர்பாக பல்வேறு கட்டங்களாக மல்யுத்த சம்மேளனத்தில் வீராங்கனைகள் புகார் அளித்தனர். ஆனால் பிரிஜ் பூஷன் தனது ஒன்றிய ஆட்சியதிகாரத்தைப் பயன்படுத்தி வீராங்கனைகளின் புகாரை குழிதோண்டி புதைக்க முயன்றார். சுதாரித்துக்கொண்ட மல்யுத்த முன்னணி வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்சி மாலிக், கீதா போகத் ஆகியோர் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுடன் இணை ந்து தில்லி ஜந்தர் மந்தரில் பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக போராட்டத்தைத் துவங்கினர். இதனை சற்றும் எதிர்பாராத ஒன்றிய பாஜக அரசு, இந்திய முன்னணி குத்துச் சண்டை வீராங்கனை மேரிகோம் தலைமை யில் விசாரணை ஆணையம் அமைத்து பிரச்சனையை சமாளிக்க முயன்றது. மேரி கோம் ஆற அமர விசாரிப்பார்; அதற்குள் பிரச்சனையின் சூடு குறைந்துவிடும் என்பது ஒன்றிய பாஜக அரசின் கணக்கு. ஆனால் மேரிகோம் விசாரணையை மிகவிரைவாக நடத்தி அறிக்கையை தாக்கல் செய்தார். மேரிகோம் அறிக்கையின் அடிப்படையில் தங்களுக்கு உரிய நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் மல்யுத்த வீரர்- வீராங் கனைகள் போராட்டத்தை கைவிட்டனர். ஆனால், ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சகம், மேரிகோம் அறிக்கையை வாங்கி வைத்துக் கொண்டதோடு சரி, அதனை வெளியிடாமல், அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காமலும் கள்ளமவுனமாக இருந்து கொண்டது. சொந்த கட்சி எம்.பி., என்பதால் பிரிஜ் பூஷனைக் காப்பாற்றுவதற்காக காலம் தாழ்த்தும் வேலையை செய்து வந்தது.
மீண்டும் போராட்டம்
இதனால் தாங்கள் ஏமாற்றப்படுவதை உணர்ந்த மல்யுத்த வீராங்கனைகள் - வீரர்கள் தில்லியில் கடந்த வாரம் மீண்டும் போராட்டத்தில் இறங்கினர். மேலும் பிரிஜ் பூஷன் மீது உடனடியாக எப்ஐஆர் பதிய வலியுறுத்தி 7 மல்யுத்த வீராங்கனைகள் கூட்டாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். உச்சநீதிமன்றமும் இம்மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்டதுடன், தில்லி காவல்துறை பதிலளிக்க உத்தர விட்டது. இதனால், சுதாரித்துக் கொண்ட மோடி அரசின் கட்டுப்பாட்டிலுள்ள தில்லி காவல்துறையினர் பிரிஜ் பூஷன் மீது 2 பிரிவுகளில் (ஒன்று போக்சோ) வழக்குப் பதிவு செய்தது. எனினும், அவரைக் கைது செய்யவோ, விசாரணை நடத்தவோ தயா ரில்லை. இதனால் பிரிஜ் பூஷன் பதவியி லிருந்து விலகும் வரையிலும், அவரை சிறைக்கு அனுப்பும் வரையிலும் போராட்டத் தை கைவிடும் பேச்சுக்கே இடமில்லை என மல்யுத்த வீராங்கனைகள் அறி வித்தனர். ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் தொடர்ந்தனர்.
குடிபோதையில் போலீசார் தாக்குதல்
இதனிடையே, புதனன்று தில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் லேசான மழை பெய்தது. இரவு வரை மழை நீடித்ததால் போராட்ட களத்தை நீர் சூழ்ந்தது. தரையில் உறங்க முடியாது என்பதால் மல்யுத்த வீரர் - வீராங்கனைகளுக்காக படுக்கை விரிப்பு ஏற்பாடுகளை செய்தார் ஆம் ஆத்மி எம்எல்ஏ சோம்நாத் பாரதி. ஆனால், அனுமதியின்றி போராட்டக் களத்துக்கு வந்ததாக கூறி சோம்நாத் பாரதி எம்எல்ஏ-வை கைது செய்து, அவரிட மிருந்த மடிக்கும் வகையிலான படுக்கை விரிப்புகளை போலீசார் பறிக்க முயன்ற னர். அப்போது மல்யுத்த வீரர் - வீராங்கனை களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. திடீ ரென வீரர் - வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்தத் துவங்கிய போலீசார், கடுமையான வன்முறையை பிரயோகித்தனர். படுக்கை விரிப்புக்களையும் பறித்தனர்.
துஷ்யந்த் போகத்துக்கு தலையில் காயம்
இதில், வினேஷ் போகத், கீதா போகத் சகோதரிகளின் இளைய சகோதரர் துஷ்யந்த் போகத்துக்கு மண்டை உடைந் தது. மேலும் சில வீரர் - வீராங்கனைகளும் போலீஸ் தாக்குதலில் காயம் அடைந்தனர்.
கதறி அழுத வினேஷ் போகத் மற்றும் சாக் சி மாலிக்
மேலும், இந்த திடீர் தாக்குதலால் அதிர்ச்சியடைந்த மல்யுத்த வீராங்க னைகளான சாக்சி மாலிக் மற்றும் வினேஷ் போகத், போராட்டக்களத்திலேயே இரு வரும் கதறி அழுதனர். குறிப்பாக, சாக்சி மாலிக் வாயில் உள்காயத்துடன் அலறித் துடித்தார். "இப்படி தாக்குதல் நடத்த நாங்கள் ஒன்றும் குற்றவாளிகள் இல்லை. எங்களை கொல்ல விரும்பினால் கொல்லுங்கள்" என்று வினேஷ் போகத்தும் கண்ணீர் விட்டார்.
பதக்கங்களை எடுத்துக்கொள்ளுங்கள்
"நான் வென்ற அனைத்து பதக்கங்களை யும் அரசாங்கம் திருப்பி எடுத்துக் கொள்ளட்டும் என்று வேண்டுகோளாக வைக்கிறேன்" என ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற பஜ்ரங் பூனியா கொதிப்புடன் கூறினார்.
மது அருந்தியிருந்த தில்லி போலீசார்
மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத் தில் தாக்குதல் நடத்தியவர்கள், சீருடை அணி யாத போலீசார் எனவும், அவர்கள் அனை வரும் மது அருந்தியிருந்ததாகவும் மல்யுத்த நட்சத்திரங்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
மல்யுத்த வீராங்கனைகள் மீதான தாக்கு தலுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மத்தியக்குழு கண்டனம் தெரிவித்துள் ளது. "பேட்டி பச்சாவோ (பெண்களை காப்போம்) என்ற கோஷம் கேலிக்கூத் தாகிவிட்டது. தில்லி காவல்துறையின் அடக்குமுறையை வன்மையாகக் கண்டிக் கிறோம். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கீழ் நேரடியாக வரும் தில்லி காவல்துறை, போராட்டக்காரர்களைத் துன்புறுத்துவதற்குப் பதிலாக, பாஜக எம்.பி.யும் மல்யுத்த சம்மேளன தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கட்சியின் டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
ராகுல் காந்தி
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை யில், "நம் நாட்டு வீரர் - வீராங்கனைகளிடம் இதுபோன்று நடந்து கொள்வது மிகவும் வெட்கக்கேடானது. பேட்டி பச்சாவோ (பெண்களை காப்போம்) என்று பாஜக கூறுவது வெற்றுக் கோஷம். உண்மையில் இந்தியாவின் மகள்களை சித்ரவதை செய்வதற்கு பாஜக ஒரு போதும் வெட்கப் படுவது கிடையாது" எனக் கூறியுள்ளார்.
தில்லி மகளிர் ஆணையம்
மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டக் களத்திற்கு நேரில் சென்று ஆதரவளித்த தில்லி மகளிர் ஆணைய தலைவர் சுவாதி மாலிவால் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "இது எனது கடமை. அதனால் மீண்டும் மல்யுத்த வீராங்கனைகளைச் சந்திக்க வந்தேன். வினேஷ் போகத் மற்றும் சாக்சி மாலிக் ஆகியோர் தாங்கள் சித்ரவதை செய்யப்படுவதாக என்னிடம் கூறி னார்கள். மேலும் குடிபோதையில் இருந்த போலீஸ் அதிகாரிகள் அவர்களிடம் தவறாக நடந்து கொண்டனர் என்று தெரிவித்தனர். அவர்களின் பாதுகாப்பு குறைபாடு குறித்து, நான் கவலைப்படுகிறேன். தில்லி போலீசார் பிரிஜ் பூஷனை ஏன் பாதுகாக்கிறது? தில்லி போலீசார் ஏன் அவரை கைது செய்யவில்லை? என கேள்வி எழுப்பினார்.