states

img

அதானியின் பல லட்சம் கோடி பொதுப் பண மோசடி குறித்து உச்சநீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்த வேண்டும்!

புதுதில்லி, பிப். 14 - அதானி குழும நிறுவனங்கள், பல லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு மக்க ளின் பொதுப்பணத்தை மோசடி செய்திருப்பதாக எழுந்துள்ள குற்றச் சாட்டு குறித்து, உச்ச நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று புதிதாக  ஒரு ரிட் மனு தாக்கல் செய்யப் பட்டுள்ளது. காங்கிரஸ் மகளிர் பிரிவைச் சேர்ந்த  டாக்டர் ஜெயா தாக்கூர் இதுதொடர் பாக புதிய மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதானி குழுமம், பங்குச் சந்தை யில் ரூ. 17 லட்சத்து 80 ஆயிரம் கோடி  அளவிற்கு ஊழல் முறைகேடு செய்துள்ளதாக, அமெரிக்காவைச் சேர்ந்த ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ நிறு வனம் அண்மையில் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. இது நாடு முழு வதும் பெரும் விவாதத்தைக் கிளப்பி யுள்ளது. அதானியின் ஊழல் முறை கேடுகள் குறித்து நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தர விட வேண்டும் என்று காங்கிரஸ், இடது சாரிகள் உள்ளிட்ட 16 எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தி வருகின்றன. 

ஆனால், ஒன்றிய பாஜக அர சானது, கூட்டுக்குழு விசாரணைக்கு மட்டுமன்றி, நாடாளுமன்ற விவா தத்தையும் கூட அனுமதிக்க முடி யாது என்று- அதானியை காப்பாற்றும் விதமாக பிடிவாதம் காட்டிவருகிறது. இந்த விவகாரத்தில், வழக்கறி ஞர்கள் எம்.எல். சர்மா, விஷால் திவாரி  ஆகியோர் சார்பில் உச்ச நீதிமன்றத் தில் அண்மையில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.  எம்.எல். சர்மா மனுவில், “’ஹிண்டன் பர்க் ரிசர்ச்’ ஆய்வறிக்கையால் அதானி குழுமம் மிகப்பெரிய அள விற்கு சரிவைச் சந்தித்துள்ள நிலை யில், அந்த அறிக்கையின் உண்மைத் தன்மை குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என்றும், விஷால் திவாரி தாக்கல் செய்த மனு வில், “ஹிண்டன்பா்க் புகார் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற உச்ச நீதி மன்ற நீதிபதி தலைமையில் குழுவை அமைக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்றும் வலியுறுத்தப் பட்டு இருந்தன.  இந்த மனுக்கள், கடந்த வெள்ளி யன்று (பிப். 10) தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ்.  நரசிம்மா, ஜே.பி. பர்திவாலா அமர்வில்  விசாரணைக்கு வந்தது. 

அப்போது, “முதலீட்டாளர் களுக்கு பல கோடி இழப்பு ஏற்பட்டுள்ள தாக மனுதாரர்கள் தெரிவிக்கின்றனர். இப்படியான சூழல் மீண்டும் ஏற்படாத வகையில் முதலீட்டாளர்களின் நலனுக்காகவும், பங்குச் சந்தையின் நிலையான வளர்ச்சிக்காகவும் ஒழுங்குமுறை கட்டமைப்பை வலுப் படுத்த வேண்டியது அவசியம்” என  குறிப்பிட்ட நீதிபதிகள், “தேவைப் பட்டால் பங்குச்சந்தை ஒழுங்கு முறைச் சட்ட விதிகளில் தேவையான மாற்றங்களைப் பரிந்துரைக்க நிபுணர் குழு அமைப்பது பற்றியும் ஆலோசிக்கலாம்” என்று தெரிவித்து, 3 நாட்களுக்குள் பதிலளிக்குமாறு ‘செபி’ அமைப்பிற்கு உத்தரவிட்டனர். அதன்படி திங்களன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, ‘செபி’ மற்றும் ஒன்றிய அரசின் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதாடினார். அவர், “இந்த விவகாரத்தைக் கை யாள பங்குச் சந்தை ஒழுங்காற்று அமைப்பும் மற்ற அமைப்புகளும் உரிய திறனைப் பெற்றுள்ளன. எனி னும், பங்குச் சந்தையை வலுப்படுத்துவதற்கான வழிகளை ஆராய நிபுணர் குழுவை அமைப்ப தில் ஒன்றிய அரசுக்கு எந்த ஆட்சேப மும் இல்லை. ஆனால், அதில் இடம்பெறும் நிபுணா்களை அரசே தேர்வு செய்ய அனுமதிக்க வேண்டும். நிபுணர் குழுவை அமைப்பது தொடர்பாக முன்யோசனையின்றி தெரிவிக்கப்படும் கருத்துகள், பங்குச் சந்தையில் முதலீடுகளைப் பாதிக்க வாய்ப்புள்ளது. நிபுணா்கள் குறித்த விவரங்களை வெளிப்படையாகத் தெரிவிக்க முடியாது என்பதால், மூடி முத்திரையிட்ட உறையில் அரசு தாக்கல் செய்யும்” என்றார். இதையடுத்து, நிபுணா் குழு தொடா்பான விவரங்களை பிப்ரவரி 15-ஆம் தேதிக்குள் வழங்குமாறு தெரி வித்த நீதிபதிகள், வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

அதானி விவகாரத்தில் விசார ணைக்கு உத்தரவிடக் கோரி, காங்கிரஸ் மகளிர் பிரிவு தலைவர் டாக்டர் ஜெயா தாக்கூர் உச்ச நீதிமன்றத் தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், “ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கையின் படி, அதானி மற்றும்  அவரது கூட்டாளிகள் பல லட்சம் கோடி பொதுப்பணத்தை மோசடி செய்திரு ப்பதாக கூறப்படும் நிலையில், அதானி குழும நிறுவனங்களில், ‘எல்ஐசி’, ‘ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா’ ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் செய்துள்ள முதலீடுகளின் தற்போ தைய நிலை என்ன? அதானி குழும நிறுவனங்களில் முதலீடு செய்ததன்  மூலம் எல்ஐசி மற்றும் எஸ்பிஐ ஆகி யவை தங்களுடைய முதலீட்டா ளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தங்கள் கடமையைச் செய்யத் தவறி விட்டதா? என்பது குறித்து தெரிய வேண்டும். எனவே, இதுகுறித்து, சிபிஐ, அமலாக்கத்துறை, வருவாய் புல னாய்வு இயக்குநரம், செபி, ஆர்பிஐ,  எஸ்எப்ஐஓ போன்ற புலனாய்வு அமைப்புகளால் உச்சநீதிமன்றத் தின் பதவியில் இருக்கும் நீதிபதி யின் மேற்பார்வை மற்றும் கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்று டாக்டர் ஜெயா தாக்கூர் வலியுறுத்தியுள்ளார்.