states

மகாராஷ்டிரா தானே மருத்துவமனையில் 18 பேர் அடுத்தடுத்து உயிரிழப்பு

தானே (மகாராஷ்டிரம்), ஆக.13- மஹாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் 18 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தானேயின் கல்வா பகுதியில் உள்ள சத்ரபதி சிவாஜி மஹாராஜ் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த பத்து பெண்கள் மற்றும் எட்டு ஆண்கள், கடந்த 24 மணி நேரத்தில் ஒரு வர் பின் ஒருவராக உயிரி ழந்தனர். அவர்களில் ஆறு  பேர் தானே நகரைச் சேர்ந்தவர்கள், நான்கு பேர் கல்யாண், மூன்று பேர் சஹாபூரைச் சேர்ந்தவர்கள், தலா ஒருவர் பிவாண்டி, உல்ஹாஸ்நகர் மற்றும் கோவண்டியைச் சேர்ந்த வர்கள்(மும்பை), ஒரு  நோயாளி வேறு இடத்திலி ருந்து வந்தவர் மற்றும் ஒரு வர் அடையாளம் தெரி யாதவர்.  இறந்தவர்களில் 12 பேர் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள். காவல்துறை துணை ஆணையர் கணேஷ் கவ்டே  கூறுகையில், “நாளொ ன்றுக்கு வழக்கமாக  ஆறு  முதல் ஏழு பேர் வரை உயி ரிழப்பார்கள்.  ஆனால், கடந்த 24 மணி நேரத்தில் 18  பேர் இறந்ததாக எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  அதிக எண்ணிக்கையிலான இறப்புகளால் அசம்பா விதம் ஏற்படாமல் இருக்க மருத்துவமனையில் காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது” என்றார். தற்போது, கடந்த 24 மணி நேரத்தில் 18 பேர் உயி ரிழந்த விவகாரம் அம்மாநி லத்தில் அரசியல் பிரச்ச னையாக மாறி உள்ளது.  என்சிபி தலைவரும், அப்பகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ஜிதேந்திர அவ்ஹாட், மருத்துவமனை நிர்வாகம் மோசமாக உள்ளது என்றார்.