பொதுத்துறை வங்கிகளில் வராக்கடன் என்றால் நேரடியாக நாமே சுமக்கிறோம். தனியார் வங்கிகளில் வராக்கடன் என்றால் அதையும் நாமேதான் மறைமுகமாகச் சுமக்கிறோம்.
வராக்கடனாக இருந்த தன் கடனை சுபாஷ் சந்திர கோயங்கா என்ற தொழிலதிபர் திருப்பிச் செலுத்துகிறார். அடடே, மோடி அரசு நடவடிக்கை எடுக்கத் தொடங்கிவிட்டதோ? அதெல்லாம் இல்லை! ஜீ டிவியை சோனி நிறுவனத்துடன் இணைக்க இந்தக் கடன்கள் குறுக்கீடாக இருப்பதால் திருப்பிச் செலுத்துகிறார். ஜீ டிவி, டிஷ் டிவி உள்ளிட்ட நிறுவனங் களின் உரிமையாளர்தான் இந்த சுபாஷ் சந்திரா. எப்படியானால் என்ன? திருப்பிச் செலுத்தினால் வரவேற்க வேண்டியதுதானே? அதற்கு முன்னர் ஓர் உதாரணத்தைப் பார்ப்போம். ஆயிரம் ரூபாய் கடன் வாங்குகிறீர்கள். திரும்பச் செலுத்தவேயில்லை. 10 சதவீத வட்டி என்று வைத்துக்கொண்டால், 10 ஆண்டு களில் வட்டி ஆயிரம் ரூபாய் சேர்ந்து, மொத்தம் இரண்டா யிரம் ரூபாய் ஆகியிருக்கும். அதைச் செலுத்தினால் கடனைத் திரும்பச் செலுத்தியதாகப் பொருள். கடன் வாங்கியவர் சிறிய கடை வைத்து வியாபாரம் செய்தார், நொடித்துப் போய்விட்டார் என்று வட்டியைத் தள்ளுபடி செய்வதாக வைத்துக்கொள்வோம். சிறு வியா பாரிக்கு என்றைக்கு அய்யா வட்டியைத் தள்ளுபடி செய்தார்கள் என்கிறீர்களா? ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோமே... அப்படியானால் அசல் ஆயிரம் ரூபாயை மட்டும் செலுத்தினாலே கடன் செலுத்தப் பட்டதாக ஆகிவிடும். ஆனால், அப்படி அசலைக்கூட முழுவதுமாகச் செலுத்தாமல், ரூ.225 மட்டும் செலுத்தினால் கடன் முடியுமா? அந்தச் சிறு வியாபாரியின் கடன் முடியாது. ஆனால், சுபாஷ் சந்திராவின் கடன் முடிந்துவிடும். ஆம்! ரூ.6,500 கோடி கடனுக்கு, ரூ.1500 செலுத்துவதாகத் தான் (இன்னும் செலுத்தவில்லை!) அவர் ஒப்புக் கொண்டிருக்கிறார். அதன்மூலம், ஜீ டிவி, டிஷ் டிவி, ஜீ லேர்ன் உள்ளிட்ட நிறுவனங்களின் உரிமையை யும் அவர் மீட்டிருக்கிறார். அத்துடன், ஜீ டிவியையும் இணைப்பு என்ற பெயரில் சோனி நிறுவனத்திடம் விற்று பெருந்தொகையை (நேரடியாகவோ, நிறுவனத்தில் முதலீடு என்ற பெயரில் மறைமுகமாகவோ) ஈட்டவிருக்கிறார்.
‘என்னங்கடா பித்தலாட்டமா இருக்குது’ என்கிறீர் களா? அதற்குத்தான் கடன் மறுகட்டமைப்பு நிறுவனங்கள் என்பவை இருக்கின்றன. கடன் மறுகட்டமைப்பு என்றால்...? வசூலிக்க முடியாத கடன்களை வாங்கி - வாங்கி என்றால் கடன் கொடுத்தவர்களுக்கு ஒரு சிறிய தொகையைக் கொடுத்து அந்தக் கடன்மீதான உரிமையை (ப்ரோ நோட் போல!) வாங்கி, தங்கள் ‘பலத்திற்கேற்ப’ முடிந்ததை வசூலித்துக்கொள்வது! இந்தக் கடனும் அப்படி யெஸ் வங்கி வழங்கியிருந்து, அந்த வங்கி நெருக்கடிக்கு உள்ளானபோது, ஜேசி ஃப்ளவர்ஸ் என்ற மறுகட்டமைப்பு நிறுவனத்திடம் விற்கப்பட்டதுதான். அந்த நிறுவனம்தான் இப்போது இந்தத் தீர்வையும் எட்டியிருக்கிறது. யெஸ் வங்கியும் தனியார் நிறுவனம்தான், ஜேசி ஃப்ளவர்சும் தனியார் நிறுவனம்தான், எப்படியானாலும் இழப்பு தனியார் நிறுவனத்துக்குத்தானே என்று தோன்று கிறதா? அவசரப்படாதீர்கள்! முதலில் ஜேசி ஃப்ளவர்சுக்கு இழப்பு என்ன என்பதைப் பார்ப்போம். ஏப்ரல் 2022இல் இந்த நிறுவனம் யெஸ் வங்கியின் வராக்கடன்களை விலைக்கு வாங்கியது. என்ன விலை தெரியுமா? ரூ.48,000 கோடி வராக்கடன்களை ரூ.11,183 கோடிக்கு வாங்கியது. ‘என்னடா குறளி வித்தை மாதிரி இருக்கு...’ என்கிறீர்களா? ஜேசி ஃப்ளவர்ஸ் நிறு வனத்துக்குப் பெரிதாக இழப்பெல்லாம் இல்லை என்று இப்போது தெரிந்திருக்குமே? எல்லாம் சரி, 48 ஆயிரம் கோடி கடனை 11 ஆயிரம் கோடிக்கு விற்றது தனியார் வங்கிதானே? அப்படித்தான் நாம் பார்க்கிறோம். ஆனால், அந்தத் தனியார் வங்கி நெருக்கடிக்கு உள்ளானதும், அந்த வங்கியை மீட்பதற்காக, அரசின் அறிவுறுத்தலின்படி, ஸ்டேட் வங்கி தலைமையிலான வங்கிகள் ரூ.11,760 கோடியை யெஸ் வங்கிக்கு அளித்தன. இப்போது சொல்லுங்கள், அந்தத் தனியார் வங்கியின் இழப்பை யார் சுமக்கிறார்கள்? தலையைச் சுற்றிக் காதைத் தொடாமல் நேரடியாகச் சொன்னால், பொதுத்துறை வங்கிகளிலுள்ள சாதாரண இந்தியர்களின் சேமிப்புதான் அங்கு போயிருக்கிறது என்பதால் அதையும் நாம்தான் சுமக்கிறோம்.
பொதுத்துறை வங்கிகளில் வராக்கடன் என்றால் நேரடியாக நாமே சுமக்கிறோம். தனியார் வங்கிகளில் வராக்கடன் என்றால் அதையும் நாமேதான் மறைமுக மாகச் சுமக்கிறோம். அதாவது, ‘போத்திக்கிட்டுப் படுத்தாலும், படுத்துக்கிட்டுப் போத்தினாலும் ஒன்றுதான்’ என்பதைப் போன்றதுதான் இதுவும்! சரி... பெயருக்குக் கொஞ்சம் திருப்பிச் செலுத்தி விட்டு, இவ்வளவு பாதுகாப்பாகத் தன் சொத்துகளை மீட்கிற இந்த சுபாஷ் சந்திரா யார்? இவர் ஒரு முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர். 2016இல் ஹரி யானாவிலிருந்து சுயேச்சையாகத் தேர்ந்தெடுக்கப் பட்டவர். சுயேச்சையாகவா? ஆம், பாஜக ஆதரவில் சுயேச்சையாகப் போட்டியிட்டு, பாஜக சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப் பட்டவர். 2022இல் மீண்டும் மாநிலங்களவைக்கு ராஜஸ்தானிலிருந்து போட்டியிட்டார். அங்கும் பாஜக ஆதரித்தாலும் தோற்றுப் போனார். பாஜகவின் ஆதரவாளர் என்பதால்தான், யெஸ் வங்கியில் மட்டுமல்ல, மற்ற வங்கிகளிலும் கடன் களைத் திருப்பிச் செலுத்தாமல், பலமுறை நடவடிக்கை களுக்கு முயற்சிக்கப்பட்டு, அனைத்திலும் காப்பாற்றப் பட்டு, இன்னும் பாதுகாப்பாக தன் நிறுவனங்களை மீட்கிறார் - கடனையும் திருப்பிச் செலுத்தாமலே! அதிலும், 10 சதவீதம்கூட பங்குகள் இவரிடம் இல்லாத நிறு வனங்களுக்கும்கூட, அரசுத் தரப்பில் நிர்வாகி நியமிக்கா மல், இவரே விற்கவும் அனுமதிக்கப்படுகிறார் என்பது தனிக்கதை. யெஸ் வங்கியின் வராக்கடன்களில் இவர் இரண்டா மிடம். முதலிடமான ரூ.12,800 கோடி யாருடையது தெரி யுமா? அனில் அம்பானியுடையது. அதாவது, பாஜக வோடு அனுசரணையாக இருந்தால், கடன் வாங்கலாம், திருப்பிச் செலுத்த வேண்டாம், சொத்துகளும் திரும்பக் கிடைத்துவிடும் என்பதற்கான உதாரணங்கள் இவர்கள். இப்படியான தொகைகளாக மோடி ஆட்சிக்கு வந்த பின் (2014-15இலிருந்து) தள்ளுபடி செய்த தொகை ரூ.14.56 லட்சம் கோடி! அதாவது, தங்களுக்கு வேண்டிய தொழிலதிபர்களுக்கு, வங்கிகளிலுள்ள சேமிப்புகளை மறைமுகமாக வழங்கிக்கொண்டிருக்கிறது மோடி அரசு. இன்னொரு முறை பாஜக ஆட்சிக்கு வந்தால், இது இன்னும் பல மடங்காக ஆகிவிடும் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.
- அ.அறிவுக்கடல்