மகாராஷ்டிர மாநிலம் நான்டெட்டிற்கு அருகே கின்வாட்டில் வெள்ளியன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. விவசாயிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் திரளாக பங்கேற்ற இந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில், கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் பங்கேற்று உரையாற்றினார், ”நாட்டில் அரசியலமைப்பு அவசர சிகிச்சை பிரிவில் உள்ளது. இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களால் செய்யப்படும் பிராண பிரதிஷ்டா அரசியலமைப்பிற்கு தேவைப்படுகிறது” என அவர் கூறினார்.