வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவின் 8 மாவட்டங்களும் கனமழை வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர்கள், இந்திய ஜனநாயக வாலிபர் மற்றும் மாணவர் சங்கத்தினர் தற்காலிக நிவாரண முகாம்கள் மூலம் உதவி செய்து வருகின்றனர். சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், முன்னாள் முதல்வருமான மாணிக் சர்க்கார், திரிபுரா மாநிலச் செயலாளர் ஜிதேந்திர சவுத்ரி ஆகியோர் நிவாரணப் பணிகளில் பங்கேற்றும், வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தும் வருகின்றனர்.