அகர்தலா, மார்ச் 4- திரிபுராவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான கூட்டணி பெற்ற வெற்றி யை தொடர்ந்து பாஜகவினர் தொடர்ந்து பயங்கரவாத வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக திரிபுரா இடது முன் னணி விடுத்துள்ள அறிக்கை வருமாறு: திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு கள், ஆளும் பா.ஜ.க வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கையில் எதிர்பாரா தவை. கடந்த 5 ஆண்டுகளாக திரிபுராவின் தவறான ஆட்சி மற்றும் தேர்தல்களை எதிர்கொள்ளும் திரிபுராவின் சாமானிய மக்களின் வெளிப்பாட்டுடன் இந்த முடிவு முரணாக உள்ளது. திரிபுராவில் 60 சத வீத வாக்காளர்கள் பாஜகவுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர் என்பதை கருத்துக் கணிப்பு முடிவுகள் தெளிவாகக் காட்டுகின்றன. இது அரசாங்கத்தின் மீது மிகப்பெரும் பகுதி மக்களின் அவநம் பிக்கையின் அறிகுறியாகும். ஆனால் பல்வேறு பாஜக அல்லாத அரசியல் கட்சி களுக்கு இடையே பாஜக எதிர்ப்பு வாக்கு கள் பிரிந்ததால், பாஜக பெரும்பான்மை வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் வாய்ப்பை எடுத்து வருகிறது.
வாக்கு எண்ணிக்கையின் போதே...
இடது முன்னணி மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்கா ளர்களுக்கு இடது முன்னணி மரியாதை மற்றும் நன்றி. தேர்தல் போராட்டத்தில் துணிச்சலான பங்கு வகித்த இடது முன் னணி ஊழியர்களுக்கு சிறப்பு வாழ்த் துக்கள். ஆச்சரியம் என்னவென்றால், பல் வேறு வாக்கு எண்ணும் மையங்களில் தங்க ளுக்கு எதிராக முடிவுகள் வருவதைக் கண்டு, பாஜக கட்சியினர் வாக்கு எண் ணிக்கை மற்றும் முடிவுகளை அறி விப்பதை சீர்குலைக்க முயன்றனர், மேலும் சில பாஜக அல்லாத வேட்பாளர்களும் தங்கள் வாக்கு எண்ணும் ஊழியர்க ளைத் தாக்கினர். காலப்போக்கில், இந்தத் தாக்குதல்கள் கணக்கெடுப்பு மையங்க ளைத் தாண்டி மாநிலத்தின் பரந்த பகு திகளுக்கும் பரவியது. உடல் ரீதியாக தாக்கு வது தொடர்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்குச் செல்வதைத் தடுத் தல், வீடுகள், கடைகள், ரப்பர் தோட்டங்கள், பண்ணைகள் போன்றவற்றை தீ வைத்து சூறையாடுதல், பல இடங்களில் பலவந்த மாக கடைகளை அடைத்து மிரட்டி பணம் பறித்தல் நடைபெறுகிறது.
கடும் கண்டனம்
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படு வதற்கு மத்தியில் ஆளுங்கட்சியினர் ஏற்பாடு செய்திருக்கும் இந்த பயங்கரம் விரும்பத்தகாதது. வாக்களிப்பில் வெற்றி, தோல்விகள் ஏற்படும். அதை சம்பந்தப் பட்ட அனைத்து தரப்பினரும் ஏற்க வேண் டும். இதுதான் ஜனநாயக நடைமுறை. ஆனால், 2018 தேர்தல் முடிவுகள் வெளி யானதில் இருந்து பாஜக அரசியல் பயங்கர வாதத் தாக்குதல்கள் நடத்தியது. 2023 தேர்தல் முடிவுகள் வெளியானதில் இருந்து இந்தக் கொடூரமான பயங்கரத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றன. ஆளுங்கட்சியின் இந்த சொல்லொணா பயங்கரவாதச் செயலை திரிபுரா இடது முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.
தடுத்து நிறுத்துக!
பயங்கரவாதத்தை உடனடியாக நிறுத்துவதில் அரசு, முதல்வர் மற்றும் ஆளும் பாஜக கட்சித் தலைமை உறு துணையாக செயல்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து, மாநிலம் முழு வதும் அமைதியான இயல்பு நிலையை மீட்டெடுக்க பயனுள்ள முயற்சிகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இது தொடர்பாக மாநிலத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் முன்முயற்சி எடுக்க வேண்டும் என்று இடது முன்னணி அழைப்பு விடுத்துள்ளது. குறிப்பாக, அரசாங்கத்தின் ஒட்டுமொத்த முன்முயற்சியானது, பயங்கரவாதத்தை நிறுத்துவதற்கும், பொதுப் பாதுகாப்பை வழங்குவதற்கும் பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்குமாறு காவல்துறை மற்றும் நிர்வாகத்தை கோரு கிறது. வன்முறையில் ஈடுபடும் குற்ற வாளிகளுக்கு எதிராக சட்டப்படி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பயங்கர வாதத்தால் பாதிக்கப்பட்ட மற்றும் ஆதர வற்ற குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இடது முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.