கஞ்சா விற்ற வாலிபர் கைது தாராபுரம், மார்ச் 30- தாராபுரத்தில் சட்ட விரோதமாக கஞ்சா விற் பனை செய்து வந்த வாலி பரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த னர். தாராபுரம் அமராவதி ஆற் றில் பழைய பாலத்தின் அரு கில் கஞ்சா விற்பனை செய்து வருவதாக தாராபுரம் போலீ சாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து காவல் உதவி ஆய்வாளர் கருப்புசாமி தலைமையில் போலீசார் அமராவதி ஆறு பழையபாலம் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப் போது பாலத்தின் அருகில் வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பனை யில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீ சார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசார ணையில் அவர் தாராபுரம் தென்தாரை பகுதியை சார்ந்த கந்தசாமி என்பவரது மகன் குருநாதன்(எ)பாலகுருநாதன் (39) என்பது தெரியவந்தது. இதன்பின், குருநாதன் மீது வழக்கு பதிவு செய்த போலீ சார், அவரிடமிருந்து 1.250 கிலோ கொண்ட கஞ்சா பொட் டலத்தை பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். குருநாதன் ஏற்கனவே பெண்ணை பாட்டில் கொண்டு தாக்கிய வழக்கில், சிறையில் இருந்து பிணையில் வெளியே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.