states

நாளை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் கலாஷேத்ரா இயக்குநருக்கு மகளிர் ஆணையம் சம்மன்

சென்னை, ஏப்.1– ஏப்.3 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகு மாறு கலாஷேத்ரா இயக்குநருக்கு தமிழ்நாடு  மாநில மகளிர் ஆணையம் சம்மன்  அனுப்பி உள்ளது. சென்னை திருவான்மியூரில் கலா ஷேத்ரா அறக் கட்டளையின் கீழ் ருக்மணி  தேவி கவின் கலை கல்லூரி செயல்படுகிறது. இங்கு பயிலும் மாணவர்களுக்கு ஆசிரியர்  ஹரி பத்மன், அலுவலர்கள் சஞ்சித் லால்,  சாய் கிருஷ்ணன், ஸ்ரீநாத் ஆகியோர் பாலி யல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இது  தொடர்பாக கலாஷேத்ரா இயக்குநர் உள்  ளிட்டோரிடம் மாணவர்கள் புகார் கொடுத்  துள்ளனர். அதன்மீது நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், பாலியல் வன்கொடுமை யில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய  வேண்டும். புகார் மீது நடவடிக்கை எடுக்காத  இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன் உள்ளிட் டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என  வலியுறுத்தி மார்ச் 30, 31 தேதிகளில் மாண வர்கள் தொடர் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து மாநில மகளிர் ஆணைய  தலைவர் ஏ.எஸ்.குமாரி மார்ச் 31 அன்று  கல்லூரிக்கு சென்று விசாரணை நடத்தி னார். இதன் தொடர்ச்சியாக கலாஷேத்ரா இயக்குநர், துணை இயக்குநர் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளார். அதில், இருவரும் திங்களன்று (ஏப்.3) நண்பகல் 12 மணிக்கு சென்னையில் உள்ள மாநில மகளிர் ஆணையத்தில் விசா ரணைக்கு ஆஜராக வேண்டும் என கூறப் பட்டுள்ளதாக தெரிகிறது. வழக்குப்பதிவு  இந்நிலையில் அடையாறில் உள்ள  அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ருக்மணி தேவி கவின் கலை கல்லூரி  ஆசிரியர் ஹரி பத்மன் மீது இந்திய தண்ட னைச் சட்டம் 354 ஏ (பாலியல் துன்புறுத்தல்). 506 (கிரிமினல் நோக்கத்துடன் நடந்து கொள்ளுதல்), பெண்கள் துன்புறுத்தலுக்கு எதிரான தமிழக அரசின் சட்டம் 4ன் கீழ்  அபராதம் விதிக்க வகைசெய்யும்  சட்டப்பிரி வின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.