states

ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி நிரலை சட்ட ஆணையம் செயல்படுத்துவதா?

சென்னை, ஜூன் 18 - ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சி நிரலை சட்ட  ஆணையம் செயல்படுத்த முயற்சிப் பதற்கு தமிழக மக்கள் ஒற்றுமை மேடை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஒருங்கிணைப்பா ளர்கள் பேரா. அருணன், க. உதய குமார்  ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு  இந்தியாவின் சட்ட ஆணை யமானது பொது சிவில் சட்டம் பற்றிய கருத்து கேட்புக்கு ஜுன் 14 அன்று அறி விக்கை வெளியிட்டுள்ளது. முப்பது நாட்களுக்குள் அது பற்றிய கருத்துக் களை அதற்கு அனுப்பிவைக்க வேண்டும் என்றும் கெடுவிடுத்துள் ளது. ஆர்எஸ்எஸ்சின் நிகழ்ச்சி நிரலைச் செயல்படுத்தும் வேலையில் சட்ட ஆணையம் இறங்கியிருப்பதை தமிழக மக்கள் ஒற்றுமை மேடை வன்மையாகக் கண்டிக்கிறது.  பாபர் மசூதியை இடித்து அங்கே ராமர் கோயில் கட்டுவது, ஜம்மு-காஷ் மீரின் 370ஆவது பிரிவை ரத்து செய்வது, பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவது என்பதே ஆர்எஸ்எஸ்சின் திட்ட மாகும். அதில் முதல் இரண்டை முடித்து விட்டவர்கள், இப்போது மூன்றாவ தையும் செயல்படுத்த துணிந்திருக்கி றார்கள்.இதற்காகத்தான் சட்ட ஆணை யத்தை தங்களது மோடி அரசின் மூலம் தூண்டியிருக்கிறார்கள்.  இதற்கு முந்தைய சட்ட ஆணை யம் இது பற்றி மக்களின் கருத்து கேட்டு, தனது முடிவை 2018இல் தந்திருக்கி றது என்பதை தற்போதைய அறி விக்கை ஒப்புக்கொள்கிறது. அந்த முடிவு, “பொது சிவில் சட்டம் அவசிய மானதும் அல்ல,

தற்போதைய சூழலில் விரும்பத்தக்கதும் அல்ல” என்பது தான். அதைச் சொல்லாமல் அது வந்து  மூன்று ஆண்டுகளுக்கு மேலாகி விட்ட தால் மீண்டும் மக்களிடம் கருத்து கேட் கிறோம் என்கிறது தற்போதைய சட்ட ஆணையம்.  இது போன்ற அடிப்படையான விஷயங்களில் சில ஆண்டுகளிலேயே நிலைமை நிச்சயம் மாறாது. ஆனாலும் ஆணையம் மீண்டும் விஷயத்தை கிளப்புவது நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் மக்களை மத ரீதியாகப் பிளவுபடுத்தும் பாஜக அரசின் இழிசெயலுக்கு துணை போவதே என்பதை சுட்டிக் காட்டுகிறது இந்த மேடை.  இந்துச் சட்டத்தில் முற்போக்கான திருத்தங்களை அண்ணல் அம்பேத்க ரும், பிரதமர் நேருவும் 1950களில் முன்மொழிந்த போது அவற்றை கடுமை யாக எதிர்த்தது ஆர்எஸ்எஸ். இப்போது பொது சிவில் சட்டம் என்று இவர்கள் கிளம்புவது முஸ்லிம்கள், கிறிஸ்த வர்களது தனி சட்டங்களை பறிக்கும் வேலையே. அதுமட்டுமல்ல, தமிழ் நாட்டின் சுயமரியாதை மற்றும் சீர்திருத்த திருமணங்களின் சட்ட அங்கீ காரத்தையும் ரத்து செய்து புரோகித திருமண முறையை அனைவர் மீதும் திணிக்கிற காரியமுமாகும்.  இந்தக் கருத்துக் கேட்கும் அறி விக்கை தேன்கூட்டைக் கலைக்கிற செயல். இதை உடனடியாக சட்ட ஆணையம் திரும்பப் பெற வேண்டும் என்று மக்கள் ஒற்றுமை மேடை வலி யறுத்திக் கேட்டுக் கொள்கிறது.  இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.