‘ஜல்லிக்கட்டில் சட்ட விதிகள் அமலாகிறதா என்பதே முக்கியம்’
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகள், மகா ராஷ்டிரத்தில் நடத்தப்படும் மாட்டு வண்டிப் பந்தயம் ஆகியவற்றுக்கு எதிராக ‘பீட்டா’ உள்ளிட்ட அமைப்புக்கள் தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கடந்த நவம்பர் 24 முதல் விசாரித்து வருகிறது. இந்நிலையில், விசாரணையின்போது, “முறையாக பயிற்சிபெற்ற காளைகளே ஜல்லிக்கட்டில் பயன்படுத்தப்படுகின்றன. காளைகளுக்கு தனியாக பயிற்சி அளிப்ப தோடு, அந்த காளைகளை தங்கள் சொந்த குடும்ப உறுப்பினராகவே பாவிக்கின்றனர்” என்று குறிப்பிட்ட நீதிபதிகள், “ஜல்லிக்கட்டு விவகாரத்தில் சட்ட விதிகளை அமல்படுத்துவதே முக்கியம்; நடைமுறையை மாற்றவேண்டும் என்பதல்ல” எனவும் தெரிவித்துள்ளனர்.
பாஜகவுக்கு கிடைத்த 6 மடங்கு அதிக நன்கொடை!
கடந்த 2021-22 நிதியாண்டில் ஒன்றியத்திலும் பல்வேறு மாநிலங்களிலும் ஆளும் கட்சி யாக உள்ள பாஜக ரூ. 614.53 கோடியை நன்கொடையாகப் பெற்றுள்ளது. இது முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் பெற்ற ரூ. 95.46 கோடியை விட 6 மடங்குகள் அதிகமாகும். தில்லி மற்றும் பஞ்சாபில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி, கடந்த நிதியாண்டில் ரூ. 44.54 கோடியை நன்கொடையாகப் பெற்றுள்ளது. மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் ரூ. 43 லட்சம் மட்டுமே நன்கொடையாகப் பெற்றதாக தேர்தல் ஆணையத்தில் தெரிவித்துள்ளது. புரூடண்ட் தேர்தல் அறக்கட்டளை பாஜகவுக்கு அதிக அளவில் நிதியை நன்கொடையாக வழங்கியுள்ளது.
என்சிபி தலைவர் நவாப் மாலிக்கிற்கு ஜாமீன் மறுப்பு!
தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும், மகாராஷ்டிர முன்னாள் அமைச்சருமான நவாப் மாலிக்கை, ஒன்றிய அரசின் அமலாக்கத்துறை, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி மராட்டியமுன்னாள் மந்திரி நவாப் மாலிக் கைது செய்யப்பட்டார். நீதி மன்ற காவலில் உள்ள அவர், தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரு கிறார். இந்நிலையில், நவாப் மாலிக் கடந்த ஜூலை மாதம் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனு புதனன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அவரது ஜாமீனுக்கு அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்த நிலையில், வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி ஆர்.என். ரோகடே, நவாப் மாலிக்கிற்கு ஜாமீன் வழங்க மறுத்து விட்டார்.
மோடியை விமர்சிப்பதா? பாஜக அங்கலாய்ப்பு...
“குஜராத் தேர்தல் சூட்டை தாங்க முடியாமல், விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்ட காங்கிரஸ் அகில இந்தியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது வார்த்தைகளில் கட்டுப்பாட்டை இழந்து, பிரதமர் நரேந்திர மோடியை ‘ராவணன்’ என்று அழைக்கிறார். மரண வியாபாரி என்றது துவங்கி ராவணன் வரை, குஜராத்தையும் மற்றும் அதன் மகனையும் (மோடி) காங்கிரஸ் தொடர்ந்து அவ மதித்து வருகிறது” என்று பாஜகவின் ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மால்வியா டுவிட்டரில் அங்கலாய்த்துள்ளார்.
சனாதனத்தை அழித்து விடும்: கிரிராஜ் சிங் அலறல்
“ஒருகாலத்தில், தீவிரவாதிகள் துப்பாக்கியையும், வெடிகுண்டுகளையும் கொண்டு மக்கள் மீது தாக்குதல் நடத்தினர். ஆனால், பாஜக ஆட்சிக்காலத்தில் உளவுத்துறை, ராணுவத்தின் திறன்கள் பல மடங்கு அதிகரிக்கப்பட்டு உள்ளதால், ஆயுதம் ஏந்திய தாக்குதல்களை முன்பு போல தீவிரவாதிகளால் நிகழ்த்த முடியவில்லை. இதனால் தீவிரவாதம் தற்போது ‘லவ் ஜிகாத்’ என்ற புதிய அவதாரம் எடுத்திருக்கிறது. இந்தியாவில் காணப்படும் இந்து தர்மத்தையும், சனாதன தர்மத்தை யும் அழிக்க, தீவிரவாதிகள் ‘லவ் ஜிகாத்’ மூலமாக சதி செய்து வருகின்றனர். இந்த விஷயத்தில் நாம் சிறிது அலட்சியம் காட்டினாலும் சனாதன தர்மத்தை ‘லவ் ஜிகாத்’ அடியோடு ஒழித்துவிடும்” என்று ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங் பேசியுள்ளார்.
‘தீவிரவாதி’ என்றது பெரிய விஷயமில்லையாம்!
“பேராசிரியர் மாணவனை பார்த்து அந்த பெயரை கூறி அழைத்திருக்கக் கூடாது. ஆனா லும், இது ஒன்றும் அவ்வளவு பெரிய விஷயம் அல்ல. நாம் கூட பலரை ‘ராவணன்’ என்றும், ‘சகுனி’ என்றும் அழைத்திருப்போம். சட்டப்பேரவை விவாதங்களில் கூட இந்த வார்த்தை யை நாங்கள் பயன்படுத்தி இருக்கிறோம். ஆனால், அப் போது எல்லாம் இது பெரிய பிரச்சனை ஆகவில்லை. ஆனால், குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த ‘கசாப்’ என்ற பெயரைக் கூறி அழைத்தால் மட்டும் அது தேசிய அளவில் ஏன் பிரச்ச னையாக மாறுகிறது என எனக்கு தெரியவில்லை” என கர்நாடகா பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பி.சி. நாகேஷ் பேசியுள்ளார்.
அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
சென்னை,நவ.30- சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரை கண்ணன் வெளி யிட்டுள்ள வானிலை அறிக்கையில் கூறி யிருப்பதாவது:- கிழக்கு திசை காற்றின் வேக மாறு பாடு காரணமாக தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யும். டிசம்பர் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங் கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசான மழை பெய்யும். 4 ஆம் தேதி தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும். இந்தநிலையில் வருகிற 5 ஆம் தேதி வாக்கில் அந்தமான் கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.100 கோடி மதிப்புள்ள கோவில் சொத்துக்கள் மீட்பு: பி.கே.சேகர்பாபு
சென்னை,நவ.30- திண்டுக்கல் மாவட்டம், குஜிலி யம்பாறை வட்டம், தீண்டாக்கல் கிரா மத்தில் அமைந்துள்ள வீரபாண் டீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துக்கள் கோவில் வசம் மீட்கப் பட்டுள்ளது என அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார். வீரபாண்டீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான சுமார் 180.98 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்புதாரர்களிடமிருந்து வரு வாய் மற்றும் காவல்துறை உதவியுடன் திண்டுக்கல் மாவட்ட உதவி ஆணையர் வி.சுரேஷ் முன்னிலையில் சுவாதீனம் பெறப்பட்டு கோவில் வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் ரூ.100கோடி யாகும். இந்த நிகழ்ச்சியின்போது குஜிலியம்பாறை வட்டாட்சியர் கே. ரமேஷ், வட்டாட்சியர் விஜயலெட்சுமி, குஜிலியம்பாறை காவல் ஆய்வாளர் சரத்குமார், செயல்அலுவலர் முருகன், ஆய்வாளர் ராஜலெட்சுமி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர் என்று அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
டிபிஐ வளாகம் இனி பேரா.அன்பழகன் வளாகம் என அழைக்கப்படும்: முதல்வர்
சென்னை,நவ.30- தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை செயல்படும் டிபிஐ வளாகம் “பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம்” என்று அழைக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:- பேராசிரியர் அன்பழகனின் நூற் றாண்டு விழாவைப் போற்றும் வகை யில் பள்ளிக் கல்வித் துறையின் வளர்ச்சிக்கென ரூ. 7500 கோடியில் பேரா சிரியர் அன்பழகனாரின் பள்ளி மேம் பாட்டுத் திட்டம் என்ற திட்டத்தை ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்த அரசால் அறிவிக்கப்பட்டு, நடப்பு ஆண்டிற்கு சுமார் ரூ. 1400 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அரசு எடுத்து வரும் பல்வேறு ஆசிரி யர் மாணவர் நலன் சார்ந்த செயல் பாடுகளால் அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து தமிழக முதல்வர் நடப்பு ஆண்டிலேயே பல்வேறு கட்டு மானத்திற்கும் மராமத்துப் பணி களுக்கும் கூடுதலாக சுமார் ரூ. 1400 கோடியை ஒதுக்கீடு செய்து அறி விப்பு வெளியிட்டிருந்தார். இத்துடன், பேராசிரியர் அன்பழக னின் நூற்றாண்டு நினைவைப் போற் றும் வகையில் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை செயல்படும் டிபிஐ வளாகத்தில் பேராசிரியர் அன்பழ கனின் திருவுருவச்சிலை நிறுவப்படு வதுடன் அவ்வளாகம் “பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம்” என்றும் அழைக்கப்படும். மேலும் கற்றல் கற்பித்தல், ஆசிரியர் திறன் மேம்பாடு, தலைமைத்துவம், மாணவர் வளர்ச்சி என பன்முக வளர்ச்சியினை வெளிப்படுத்தும் சிறந்த பள்ளிகளுக்குப் பேராசிரியர் பெயரில் விருதும் வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட் டுள்ளது.
அணுஉலைகள் ஆயுட்காலம் நீட்டிப்பு ஜப்பான் நடவடிக்கை
டோக்கியோ, நவ.30- எரிபொருள் பற்றாக்குறை நிலவுவதால் அதைக் காரணம் காட்டி, அணுஉலைகளின் ஆயுட்காலத்தை நீட்டிக்க ஜப்பான் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அணுஉலைகள் 60 ஆண்டுகள் வரையில்தான் பயன்படுத்துவது என்றும், அணுசக்தியில் இருந்து மாற்று எரிபொருளுக்கு மாறிவிடுவது என்றும் எடுத்த முடிவுகளின் அடிப்படையில் ஜப்பான் அரசு சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. ஆனால், தற்போது உலக அளவில் எழுந்துள்ள எரிபொருள் நெருக்கடியால், சில அணுஉலைகளை குறித்த காலத்திற்குப் பிறகும் பயன்படுத்துவது என்று முடிவெடுத்துள்ளார்கள். எந்தெந்த அணுஉலைகளை அதன் ஆயுட்காலமான 60 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப் போகிறார்களோ, அவற்றை மறுகட்டமைப்பு செய்வதற்குத் தேவையான சிறப்பு நடவடிக்கைகளை எடுக்கிறார்கள். புதிய பாதுகாப்பு அமைப்புகளைக் கொண்ட அடுத்த தலைமுறையின் அணுஉலைகளை உருவாக்கி அவற்றை பொருத்தத் திட்டமிட்டுள்ளனர். இதற்கான புதிய திட்டமிடலை உருவாக்கும் பணிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. 2011 ஆம் ஆண்டில் நிலநடுக்கம் மற்றும் அதைத் தொடர்ந்த சுனாமியால் ஃபுகுசிமா அணுமின் நிலையம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அப்போது, அணுஉலைகளின் ஆயுட்காலம் 40 ஆகக் குறைக்கப்பட்டது. கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அதிகபட்சமாக 60 ஆண்டுகள் வரையில் இயக்கிக் கொள்ளலாம் என்று வைத்திருந்தனர். தற்போது எரிபொருள் பற்றாக்குறையைக் காட்டி, அதை மேலும் தளர்த்துகிறார்கள்.