கர்நாடக மாநிலம், கொப்பல் மாவட்டம் கங்காவதி வட்டம் மருகும்பி தலித் குடியிருப்பை தீக்கிரையாக்கிய குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கியுள்ளதற்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வரவேற்பு தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில தலைவர் த.செல்லக்கண்ணு, பொதுச்செய லாளர் கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மருகும்பி கிராமத்தில் செயல்படுகிற உணவு விடுதிகள் மற்றும் சலூன்களுக்குள் தலித்துகள் நுழைய முடியாது. சாதி ரீதியான தடைகள் அவர்கள் மீது விதிக்கப்பட்டிருந்தது. இதற்கு எதி ராகத் தொடர்ந்து ஒடுக்கப்பட்ட மக்கள் குரல் கொடுத்து வந்தனர். இந்நிலையில், திரையரங்கு ஒன்றில் டிக்கெட் வாங்குவதில் தகராறு ஏற்பட்டுள் ளது. அடிதடியும் நிகழ்ந்துள்ளது. அடித்த வர்கள் தலித்துகள் இல்லையென்றாலும், மருகும்பி கிராமத்தைச் சேர்ந்த தலித்துகள் தான் ஆள்வைத்து அடித்ததாக புரளியைக் கிளப்பி தலித் குடியிருப்புக்குள் நுழைந்த வன்முறைக் கும்பல் ஏராளமான வீடு களைக் தீயிட்டுக் கொளுத்தியது.2014 ஆகஸ்ட் 28 அன்று இரவில் இக்கொடூரம் நடைபெற்றது. குற்றவாளிகள் மீது நடவடிக்கை கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் குரல் கொடுத்தன. இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தபோதும், சாட்சி சொல்வதற்கு எவரும் முன் வரமாட்டார்கள் என்று சாதிய வாதிகள் எதிர்பார்த்தனர். ஆனால், வீரேஷ் மருகும்பி சாட்சி சொல்ல முன்வந்தார். இவர் விவசாயிகள் இயக்க தலைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பின ரும் ஆவார்.வீரேஷ் சாட்சி சொல்வதைத் தடுப்பதற்காக 2015 ஜூலை 10 அன்று அவரைப் படுகொலையே செய்தனர் சாதியவாதிகள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் எம்.ஏ.பேபி தலைமையில் இதனைக் கண்டித்து மாபெரும் போராட்டம் நடை பெற்றது. வழக்கில் எந்தவொரு திசை திருப்ப மும் இல்லாமல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்காணித்து நடத்தி வந்தது. 117 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. 72 ஆவணங் களுடன், 38 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.குற்றம்சாட்டப்பட்டவர்களில் 16 பேர் இறந்து விட்டனர். மீதமுள்ள 101 பேரில் 98 பேர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், கர்நாடக தலித் உரிமைகளுக்கான அமைப்பும் இதர அமைப்புகளையும்,பொது மக்களை யும் இணைத்துக்கொண்டு இவ்வெற்றிக்கு பாடுபட்டது குறிப்பிடத்தக்கது. வரலாற்றுச் சிறப்பு மிக்க இத்தீர்ப் பினை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வரவேற்கிறது” என அதில் கூறப்பட்டுள்ளது.