states

தீவிரமடையும் கனமழை: 8 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

சென்னை, நவ. 1- வங்கக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, செவ்வா யன்று (நவ.1) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 8  மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன  முதல் மிக கனமழை பெய்தது. இந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதா வது: தமிழக பகுதிகள் மற்றும் வட இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேல்  நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, புதன் கிழமை (நவ. 2) தமிழ்நாடு, புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.  

கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை,  மயிலாடுதுறை,  புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக் குடி, நெல்லை, குமரி, நீலகிரி, கோவை,  திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு  இடங்களில் கனமழை பெய்யவாய்ப் புள்ளது. வியாழக்கிழமை (நவ. 3 )  தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால்  பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.  குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை, திருப்பூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு  இடங்களில் கனமழை பெய்யவாய்ப் புள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை  மன்னார் வளைகுடா, தமிழகம் மற்றும் வடக்கு இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு  வங்கக்கடல் பகுதிகளில்  சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ  மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு  செல்ல  வேண்டாம் என்று அறிவுறுத்தப்படு கிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.