states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

  1. நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம் படுத்தும் வகையில் ஒன்றிய அரசு மாநிலங் களுக்கு முழு ஆதரவை வழங்க வேண்டும். முக்கி யமாக தமிழ்நாட்டின் ஜி்எஸ்டி இழப்பீட்டுத் தொகையான ரூ.11,185.82 கோடியை ஒன்றிய அரசு உடனடி யாக விடுவிக்க வேண் டும் என தமிழ்நாடு நிதி யமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசி யுள்ளார். 
  2. அதிமுக ஆட்சியில் அர சுக்கு எதிராக போரா டிய அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்திய  நாட்களை வேலை நாட்  களாக அறிவித்து தமிழ் நாடு அரசு அரசாணை வெளியிட்டது.
  3. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெறக் கோரி நவம்பர் 29-ஆம் தேதி ராஜ்பவனை முற்றுகையிடும் போரா ட்டம் நடத்தப்போவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் இரா.முத்தரசன் அறிவித்துள்ளார்.
  4. தமிழ்நாட்டில் அமைந்து ள்ள தொழில் நிறுவனங் களில் தமிழ்நாட்ட வருக்கே முன்னுரிமை வழங்கப்படும்; கிருஷ்ண கிரியில் அமையும் “டாடா எலெக்ட்ரானிக்ஸ்” ஆலையில் 80% தமிழ்நாட்டவரை நிய மிக்க அந்நிறுவனம் உறுதி அளித்துள்ளது என  அமைச்சர் தங்கம் தென்ன ரசு தெரிவித்துள்ளார்.
  5. கர்நாடக மாநிலம் மங்களூருவில் நிகழ்ந்த குக்கர் குண்டுவெடிப்பு வழக்கை என்ஐஏ விசாரணைக்கு மாற்றி ஒன்றிய உள்துறை அமை ச்சகம் உத்தரவிட்டுள் ளது
  6. ஒலிம்பிக்கில் வெண் கலப் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரரான விஜேந்தர் சிங், ராகுல் காந்தியுடன் இணைந்து காங்கிரஸ் கட்சியின் “இந்தியா ஒற்றுமை” யாத்திரையில் கலந்து கொண்டார்.
  7. சட்டசபை தேர்தலை யொட்டி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நவம்பர் 27,28 ஆகிய தேதிகளில் குஜராத்தில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
  8. சிபிஐ குற்றப்பத்திரிகை யில் மணீஷ் சிசோடியா வின் பெயர் இல்லை. போலி கலால் கொள்கை வழக்கில் சிசோடியா மீது அவதூறு ஏற்படுத்த முய ற்சி செய்யப்பட்டுள்ளது நிரூபணமாகியுள்ளது என தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
  9. இந்தியாவுக்கான வியட் நாம் தூதர் நகுயென் தன்  ஹை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்தார்.
  10. பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்திற்குட்பட்ட ஒரு கிராமத்தில் சாக்லேட் வாங்கித்தருவதாகக் கூறி 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு “5  தோப்புக்கரணம்” தண்ட னையாக விதித்து கிராம சபை உத்தரவிட்ட நிலை யில், குற்றவாளி 5 தோப்பு க்கரணம் போட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சி யை ஏற்படுத்தியுள்ளது.
  11. பிரேசிலில் ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நிறைவு பெற்று, வாக்குகள் எண்ணப்பட்டு, இடதுசாரித்  தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான லூயிஸ் இனாசியோ லூலா டி சில்வா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு பல நாட்கள் ஆகிவிட்டன. ஆனால், அந்த முடிவை ஏற்றுக் கொள்வதாக தற்போதைய ஜனாதிபதியும், லூலாவை எதிர்த்துப் போட்டியிட்டவருமான ஜெய்ர் போல்சனாரோ இதுவரை அறிவிக்கவில்லை. சில இடங்களில் மீண்டும் வாக்குகளை எண்ண வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறார்.
  12. உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்டு வரும் நடவடிக்கை யில் அதிருப்தி கொண்டுள்ள ரஷ்யர்களில் சிலரைத் தங்கள் உளவாளிகளாக மாற்ற அமெரிக்காவின் உளவு அமைப்பு சிஐஏ முயன்று வருகிறது. வால் ஸ்டிரீட் நாளிதழ் இதுகுறித்த  செய்தியை வெளியிட்டுள்ளது. உளவாளிகளைப் பணியில் அமர்த்துவது குறித்து ஒரு கூட்டமொன்றில் சிஐஏவின் துணை இயக்குநர் ஹெய்டன் மார்லோ பேசியதை அந்த நாளிதழ்  சுட்டிக்காட்டியுள்ளது.
  13. பெருவின் பிரதமர் அனிபல் டாரஸ் தனது பொறுப்பில் இருந்து விலகியிருக்கிறார். நாடாளுமன்றத்தில் நம்பிக்கை  தீர்மானத்தில் தோல்வியடைந்ததால் அவர் இந்த முடிவை எடுத்தார். அவருடைய பதவி விலகளை ஜனாதிபதி பெட்ரோ காஸ்டில்லோ ஏற்றுக் கொண்டார். எதிர்க்கட்சிகளுக்குப் பெரும்பான்மை யுள்ள நாடாளுமன்றத்தில் இடதுசாரி ஜனாதிபதி காஸ்டில்லோவின் முன்மொழிவுகளுக்கு பெரும் முட்டுக்கட்டைகள் போடப்பட்டு வருகின்றன.