states

பாஜகவை கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்

சென்னை,பிப்.23- மக்கள் விரோத பாஜகவை கண்டித்து வருகிற 28 ஆம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து அதனைச்  செயல்பட விடாமல் முடக்குவதற்குத் திட்டமிட்ட முறையில் பாஜகவும் அதன்  துணை அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன. மத அடிப்படையில் வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதோடு சாதி வெறியையும் ஊக்கப்படுத்தி வருகின்றன. தனிநபர்களுக்கு எதிராகத் தரங் கெட்டுப் பேசுவது, வீம்புக்கு வம்பி ழுக்கும் வகையில் வேண்டுமென்றே அரசியல் தலைவர்களுக்கு எதிராக அவதூறுகள் பரப்புவது;

ஆத்திர மூட்டும் வகையில் ஆபாசமான விமர் சனங்களின் மூலம் இழிவுபடுத்துவது; தாங்களே தங்களுக்கு எதிராகப் பெட்ரோல் குண்டுகளை வீசிக் கொண்டு வன்முறைகளைத் தூண்டும் வகையில் நாடகமாடுவது; கூலிப்படையினரை ஏவி கொலைகள் செய்வது; ஊடகத்தினரை மிரட்டுவது; சமூக ஊடகங்களில் பொய்ச் செய்தி களைப் பரப்பி சமூகத்தில் பதற்றத்தை  ஏற்படுத்துவது என அவர்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். இத்தகைய மக்கள்விரோத போக்குகளுக்கு ஆளுநரும் துணை யாக இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அத்துடன், அவரது நடவடிக்கைகள் சனாதன சக்திகளின் வன்முறை போக்கு களுக்கு இந்திய ஒன்றிய அரசின் மறைமுகமான ஆதரவும் இருக்கிறது எனக் காட்டுகிறது. தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைத்து, மாநிலத்தின் முன்னேற் றத்தைத் தடுப்பதற்கு முயல்கிறது.  எனவே சனாதன சக்திகளுக்கு எதிராக பிப்.28 அன்று சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துவது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தீர்மானித்துள்ளது. இதில் தோழமை கட்சிகளும் அதன் தலைவர்களும், ஜனநாயக சக்திகளும் திரளாகப் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்திருக் கிறார்.