states

தீக்கதிர் விரைவு செய்திகள்

மொழியின் பெயரால் நாட்டை பிரிக்கிறார்களாம்: மோடி பேச்சு

“நமது நாட்டில் சில அரசியல் கட்சிகள் மக்களுக்குள் சண்டையை ஏற்படுத்த மொழிகளை தவ றாகப் பயன்படுத்தி வருகிறார்கள். கனவுகளை நிறைவேற்றத் துடிக்கும் யாருக்கும் எந்த வொரு மொழியும் தடையாக இருக்கக் கூடாது. இதற்காகத்தான் நுழைவுத் தேர்வுகளை பிராந்திய  மொழிகளில் இந்த அரசு நடத்துகிறது. இதனால் நாட்டின் இளைஞர்கள் தங்களது முழு திறனை வெளிபடுத்தி வருகிறார்கள்” என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.

ஆட்சிக்கு எதிராக யார் வந்தாலும் பாஜக விட்டுவைக்காது...

“மகாராஷ்டிராவில் உள்ள பாஜக அமைச்சர்கள் 3 பேர் மீது பண மோசடி தொடர்பாக ஆதா ரங்களுடன் புகார்களை அனுப்பியுள்ளோம். இவர்கள் மீதான விசாரணை எப்போது தொடங்கும்? தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை பொறுத்த அளவில் அமலாக்கத்துறை அவர்  மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கும். தங்கள் ஆட்சிக்கோ, கட்சிக்கோ யாராவது குறுக்கே நின்றால்  அவர்களை பாஜக விட்டு வைக்காது” என்று சிவசேனா (உத்தவ் அணி) எம்.பி. சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

பாஜக ஒரு மோசடி கட்சி; சுப்பிரமணியசாமி தாக்கு!

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிரடியாக கைது செய்துள்ள நிலை யில், இதனைக் குறிப்பிட்டு, சுவாமிலியன் என்ற பெயரில் டுவிட்டரை பயன்படுத்தும் ஒருவர்,  “சிரிப்பை அடக்க முடியலை. அதிமுக-பாஜக கூட்டணி ஆட்சியின் காலத்தில் நடந்த முறைகேட்டில்  செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார். பாஜக ஒரு மோசடி கட்சியாக உள்ளது’’ என விமர்சித்தி ருந்தார். இந்நிலையில், அந்த டுவிட்டர் பதிவை, பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணியசாமி ரீடுவீட்  செய்துள்ளார். இன்னொருவரின் டுவிட்டை ரீடுவீட் செய்வது என்பது அதில் உள்ள கருத்தைத் தானும் ஏற்பது போன்றதாகும் என்பதால், பாஜக மோசடிக் கட்சி என்று சுப்பிரமணியசாமியும் விமர்சிப்பதாக அமைந்துள்ளது. ஸ்வாமிலியனின் பதிவில் அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சிக் காலம் என்று கூறியிருப்பது மட்டும் பிழையாகும்.

அடுத்த குறி அமைச்சர் சிவசங்கர்: அண்ணாமலை பேச்சு

பாஜக தலைவர் அண்ணாமலை ஜெயங்கொண்டத்தில் பேசியுள்ளார். அப்போது, செந்தில்  பாலாஜிக்கு அடுத்து எஸ்.எஸ். சிவசங்கர்தான் என்று கூறியுள்ளார். “செந்தில் பாலாஜி கைது திமுகவிற்கு நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூனியராக யார் இருப்பார் என நான் ஆராய்ச்சி செய்து பார்த்தேன். குட்டி செந்தில் பாலாஜி யார் என்றால் இந்த  (அரியலூர்) மாவட்டத்தில் இருக்கும் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர்தான். செந்தில் பாலாஜி பணம்  வாங்கிக்கொண்டு வேலை கொடுப்பார். சிவங்கர் பணம் வாங்கிக்கொண்டு டிரான்ஸ்பர் கொடுப்பார்.  அடுத்த திமுக பைல்ஸில் அண்ணன் சிவசங்கர் இருக்கிறார்” என்று அண்ணாமலை பேசியுள்ளார்.

தெலுங்கானா மாநிலத்திற்குள்ளும் புகுந்த வருமான வரித்துறை!

ஒன்றிய பாஜக அரசு, தனக்கு எதிரான வலுவான எதிர்க்கட்சிகளை மிரட்டிப் பயமுறுத்துவதற்கு, வருமான வரித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புக்களை கருவியாக பயன்படுத்தி வருகிறது. கடந்தவாரம் தமிழ்நாட்டில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்க மானவர்களின் வீடுகளைக் குறிவைத்து வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இந்நிலை யில், புதனன்று தெலுங்கானாவில் ஆளும்கட்சியின் பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் மேதக் நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகர் ரெட்டி, நாகர் கர்னூல் எம்எல்ஏ ஜனார்த்தன் ரெட்டி,  புவனகிரி தொகுதி எம்எல்ஏ சேகர் ரெட்டி ஆகியோரது வீடு, அலுவலகம், உறவினர், நண்பர்களின் வீடுகள், அலுவலகங்கள் உட்பட 60 இடங்களில் சோதனை நடத்தியுள்ளது.

நீட் தேர்வு விலக்கு ஒன்றிய அரசுக்கு பதிலளிக்கப்படும்:  மா.சுப்பிரமணியம்

சென்னை,ஜூன் 15- நீட் தேர்வு விலக்கு குறித்து ஒன்றிய  அரசுக்கு இரண்டு மூன்று தினங்களில் பதிலளிக்கப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்க ளிடம் பேசிய அவர், “தமிழ்நாட்டில் 1,44,516 மாணவர்கள் நீட் தேர்வு எழுதியதில் 78,693 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் மாணவர் களை தொலைபேசியில் அழைத்து உளவியல் ஆலோசனை வழங்க அரசு  முடிவு செய்து தற்போது நீட் தேர்வில்  தேர்ச்சி பெறாத 65,823 மாணவர்க ளுக்கு மனநல ஆேலாசனை வழங்கப்பட்டு வருகிறது” என்றார். நீட் தேர்விலிருந்து விலக்கு கோருவதில் ஒன்றிய கல்வித்துறை சில விளக்கங்களை கோரியுள்ளது. அது தொடர்பாக ஒன்றிய அரசுக்கு  2-3 நாட்களில் விளக்கம் அளிக்கப் படும். நீட் தேர்விலிருந்து விலக்கு பெறு வதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது’ என்றும் அவர் கூறினார்.

அரசு வேலைவாங்கித் தருவதாக மோசடி:   2 பேர் கைது

சென்னை, ஜூன் 15- சென்னை ராமாபுரம், 5-வது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் தனசேகர். இவர் உள்பட 3 பேரிடம்  பரமக்குடியை சேர்ந்த ஞானகருணா கரன் என்பவர் பதிவுத்துறையில் அரசு  வேலை வாங்கித்தருவதாக கூறி பூக்கடை பகுதியில் வைத்து ரூ.18 லட்சத்து 13 ஆயிரத்து 600 பெற்றார்.   ஆனால் அவர் வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் பூக்கடை காவல் நிலை யத்தில் வழக்குப்பதிவு செய்து ஞான கருணாகரனை கைது செய்தனர்.  இதேபோல் தரமணி, எம்.ஜி.ஆர்.  நகரை சேர்ந்த பரமேஸ்வரி என்ப வரது மகளுக்கு மின்வாரியத்தில் அரசு  வேலை வாங்கித்தருவதாக திரு வான்மியூரை சேர்ந்த குணசேகரன்(70) என்பவர் ரூ.15 லட்சத்து 75 ஆயிரம் பெற்றார். ஆனால் அவர் கூறியபடி வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் தரமணி போலீசார் குணசேகரனை கைது செய்தனர். 

தங்கம் விலை குறைந்தது

சென்னை, ஜூன் 15- தங்கம் விலை கடந்த சில நாட்களா கவே குறைந்து வருகிறது. வியாழ னன்று (ஜூன் 15)  கிராமுக்கு ரூ. 45ம்  சவரனுக்கு ரூ.360-ம் குறைந்தது. வெள்ளி விலையும் குறைந்திருக் கிறது. கிராம் ரூ.78.50-ல் இருந்து ரூ. 77.50  ஆகவும், கிலோ ரூ.78,500 -இல் இருந்து  ரூ. 77,500 ஆகவும் குறைந்துள்ளது. கடந்த மாதம் சவரன் ரூ.46 ஆயி ரத்தை தாண்டிய தங்கம் தற்போது ரூ. 44 ஆயிரத்துக்கு வந்துள்ளது.

ஜூலை 18, 19இல் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை, ஜூன் 15- தமிழ்நாட்டில் வருகிற 18,19ஆம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப் புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக, ஜூன் 16 ஆகிய தேதி தமிழ்நாடு மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி  மின்னலுடன் கூடிய லேசா னது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜூன் 18 மற்றும் 19  ஆகிய தேதிகளில் திருவள் ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணா மலை, தருமபுரி, கள்ளக் குறிச்சி, சேலம், திருச்சி, பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை மற்றும்  அரியலூர், திருப்பத்தூர்,  வேலூர், திருவண்ணா மலை, கிருஷ்ணகிரி, தர்ம புரி, கள்ளக்குறிச்சி, சேலம்,  நாமக்கல், ஈரோடு மாவட்டங் களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப் புள்ளது.