states

அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு இல்லை: மா.சுப்பிரமணியன்

சென்னை, செப்.18- அரசு மருத்துவமனைகளில் மருந்து கள் இல்லை என்று ஊழியர்கள் சொன்னால் மக்கள் உடனடியாக புகார் செய்யலாம் என்றும், தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு இல்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரி வித்துள்ளார். இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் மருந்துகள் கையிருப்பு மற்றும் கொள்முதல் குறித்த கலந்தாய்வு கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழக அலுவலகத்தில் சனிக்கிழமையன்று நடைபெற்றது. இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன், மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் செந்தில்குமார், மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் நாராயணபாபு, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குனர் டாக்டர் எழிலரசி மற்றும் உயர் அலு வலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின்னர் செய்தி யாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிர மணியன் கூறியதாவது:-

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ் வுத்துறை சார்பில் மருத்துவ மனைகளில் தொடர்ந்து ஆய்வுகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. மருந்த கங்களில் அவசிய மருந்துகள், சிறப்பு மருந்துகளின் கையிருப்பு குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில், அத்தியா வசிய மருந்துகள் 327 வகைகளும், சிறப்பு மருந்துகள் 301 வகைகளும் கொள்முதல் செய்யப்பட்டு 3 மாதங் களுக்கு தேவையான அளவில் மருத்துவமனைக்கு  அனுப்பப்பட் டுள்ளது. தமிழகத்தில் உள்ள மருத்துவ மனைகளில் மருந்து தட்டுப்பாடு இல்லை. மருந்துகளின் கையிருப்பு குறித்து கள ஆய்வுகளும் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 32 மருந்து கிடங்கு கள் செயல்பட்டு வருகின்றன. புதி தாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங் களுக்கு ரூ.30 கோடி செலவில் புதிய மருந்து கிடங்குகள் அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. இதன் மூலம் இந்தியாவில் அனைத்து மாவட் டங்களிலும் மருந்து கிடங்குகளை கொண்ட ஒரே மாநிலமாக தமிழகம் அமையும். மருத்துவமனைகளில் எதிர் பாராத வகையில் தட்டுப்பாடு ஏற்பட்டா லும் அவற்றை மருத்துவமனை நிர் வாகமே கொள்முதல் செய்ய நிதி வசதி யும், நிர்வாக அனுமதியும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. ஆரம்ப சுகாதார மையங்கள், மருத் துவ கல்லூரி மருத்துவமனைகள் ஆகிய இடங்களில் மருந்துகள் இல்லை என ஊழியர்கள் தெரிவித்தால் உடன டியாக பொதுமக்கள் 104 என்ற உதவி எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம். இதற்காக நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரிகள் புகார் மீது உரிய நட வடிக்கை மேற்கொள்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

;