திருநெல்வேலி, மே 27 - செங்கோட்டையில் இருந்து திருநெல்வேலி வழியாக சென்னை தாம்பரத்துக்கு தாமிரபரணி எக்ஸ் பிரஸ் என்ற பெயரில் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு நேரடி ரயில் இல்லை என்ற பயணிகளின் புகாரை நிவர்த்தி செய்யும் வகையில் இயக் கப்படும் இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது. இந்த ரயிலை வாரத்திற்கு 3 முறை இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் சங்கத்தினர், ஆர்வலர்கள் தொடர்ந்து கோ ரிக்கை வைத்து வந்த நிலையில், ஜூன் 1 அன்று முதல் வாரத்திற்கு 3 முறை இந்த ரயில் இயக்கப்படு மென தென்னக ரயில்வே அறி விப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு வாரமும் ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய 3 நாட்களிலும் வண்டி எண். 20683 சென்னை தாம்பரத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10.50 மணிக்கு செங்கோட்டைக்கு வந்தடையும். மறு மார்க்கமாக வண்டி எண். 20684 செங்கோட்டையில் இருந்து தாம்பரத்துக்கு இயக்கப்படும் விரைவு ரயில் வாரந்தோறும் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் மாலை 4.15 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப் பட்டு, மறுநாள் காலை 6.05 மணிக்கு சென்னை தாம்பரத்தை சென்ற டையும். இந்த ரயில்கள் விழுப்புரம், திருப்பாதிரி புலியூர், மயிலாடு துறை, திருவாரூர், திருத்துறைப் பூண்டி, முத்துப்பேட்டை, பட்டுக் கோட்டை, அறந்தாங்கி, காரைக் குடி, அருப்புக்கோட்டை, விருது நகர், நெல்லை, சேரன்மகாதேவி, அம்பை, பாவூர்சத்திரம், தென்காசி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இதில் 2 இரண்ட டுக்கு குளிர்சாதன பெட்டிகள், 5 மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டி கள், 3 பொதுப் பெட்டிகள், 2 லக்கேஜ் பெட்டிகள் உள்பட மொத்தம் 17 பெட் டிகள் இணைக்கப்படுகின்றன.