states

கல்வி அதிகாரியின் பழிவாங்கும் போக்கு: உண்ணாநிலைப் போராட்டம் அறிவிப்பு

சென்னை, மே 28 - கரூர் மாவட்டக் கல்வித் துறையின் தொடர் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்து வரும் 30ஆம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் பொதுச்செயலாளர் ச.மயில்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டத்தில் கல்வித் துறை அலுவலர்கள் பொது மாறுதல் கலந்தாய்வின் போது செய்த தவறுக்காக கடவூர் ஒன்றியத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் குளித்தலை மாவட்டக் கல்வி அலுவலரால் தற்காலி கப் பணி நீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து கடந்த  மாதம் 11ஆம் தேதி குளித்தலை  மாவட்டக் கல்வி அலுவ லகத்தில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. இதன்  காரணமாக அன்றே ஆசிரியரின்  தற்காலிகப் பணி நீக்கம் விலக்கிக் கொள்ளப்பட்டது. ஆனால், போராட்டம் நடத்தியதற்காக சங்கப் பொறுப்பாளர்கள் 7 பேர்  கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் உத்தர வின் பேரில் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இது ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் செயலாகும். 7 பேரின் தற்காலிகப் பணி நீக்கத்தை ஒன்றரை மாதம் கழித்து முதன்மைக் கல்வி அலுவலர் விலக்கிக்கொண்டு ஆணை பிறப்பித்துள்ளார்.  

ஆனால், தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்ட 3 இடைநிலை ஆசிரியர்களை விதிகளுக்குப் புறம்பாக வேறு ஒன்றியங்களுக்கு பணி  மாறுதல் செய்து ஆணை பிறப்பித்துள்ளார். இடை நிலை ஆசிரியர்களின் முன்னு ரிமை என்பது ஒன்றியத் திற்குள்ளேயே கணக்கிடப் படுகிறது. எனவே வேறு  ஒன்றியத்திற்குப் பணிமாறுதல் அளித்தது அரசாணை களுக்கு முரணானதாகும்.  அதேபோல் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர்கள் 3 பேரை அதே ஒன்றியத்திற்குள் வேறு பள்ளிகளுக்கு பணிமாறுதல் செய்துள்ளார். நியாயம் கேட்ட சங்கப் பொறுப்பாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள பழிவாங்கும் இந்த நடவடிக்கை களை உடனடியாகத் திரும்பப் பெற்று அவர்களை மீண்டும்  பழைய இடத்தில் பணிய மர்த்த வேண்டும் என்று  தொடக்கக் கல்வித்துறையை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். மேலும், தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களின் நியமன  அலுவலர் மாவட்டக் கல்வி  அலுவலர் ஆவார். தொடக்கக்  கல்வித்துறையில் பணியாற்றும்  ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், அதை விலக்கிக் கொள்ளவும், மாவட்டக் கல்வி அலுவலர்க ளுக்கே அதிகாரம் உள்ளது. அந்த  அதிகாரத்தைத் தானே எடுத்துக் கொண்டு அதிகார துஷ்பிரயோ கத்தில் கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஈடுபட்டுள்ளார். இவரது செயல்பாடுகள் மீது பள்ளிக்கல்வித் துறையில் விசாரணை மேற்கொண்டு அவர்  மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.